News March 20, 2025
2008 முதல் ஐபிஎல் விளையாடும் வீரர்கள் பட்டியல் இதோ!

ஐபிஎல் தொடரில் இதுவரை ஆயிரக்கணக்கான கிரிக்கெட் வீரர்கள் விளையாடியுள்ளனர். ஆனால் தொடக்க சீசனில் இருந்து வரவிருக்கும் சீசனில் ஒரு சிலர் மட்டுமே விளையாட உள்ளனர். அவர்களில், ஸ்வப்னில் சிங், ரஹானே, மனிஷ் பாண்டே, இஷாந்த் சர்மா, ஜடேஜா, அஸ்வின், தோனி, கோலி, ரோஹித் ஆகியோர் இன்னும் விளையாடி வருகின்றனர். இவர்கள் அனைவருமே இந்தியர்கள் என்பது கூடுதல் சிறப்பாகும்.
Similar News
News March 20, 2025
எடை குறைப்பு, சர்க்கரை நோய்க்கு ஊசி வந்தாச்சு!

சர்க்கரை நோய் (டைப் 2) மற்றும் உடல் எடை குறைப்பிற்கு உலகளவில் பிரபலமான USAவின் Mounjaro மருந்து இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ஒற்றை டோஸ் குப்பி மட்டுமே தற்போது கிடைக்கும். இந்த மருந்தை வாரம் ஒரு முறை, அதுவும் பரிந்துரைக்கப்பட்ட உணவு, உடற்பயிற்சிகளுடன் மட்டுமே எடுத்துக் கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்தியாவில் சர்க்கரை நோய், உடல் பருமனால் 10 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
News March 20, 2025
2025ல் மகிழ்ச்சியான நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?

உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற பட்டத்தை இந்த முறையும் பின்லாந்து தக்க வைத்துள்ளது. OXFORD பல்கலை. வெளியிட்ட ‘World Happiness Report 2025’ அறிக்கையின்படி, உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையில் நார்டிக் நாடுகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன. 147 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில், இந்தியாவை பின்னுக்கு தள்ளி PAK 109வது இடத்திலும், இந்தியா 118வது இடத்திலும் உள்ளது. AFG கடைசி இடத்தில் உள்ளது.
News March 20, 2025
மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்: பறந்த அதிரடி ஆர்டர்

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவர், 200 ரூபாய் மதுபானத்துக்கு கூடுதலாக ₹40 வசூலித்த வீடியோ அண்மையில் வைரலானது. இந்நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட டாஸ்மாக் நிர்வாகம், சம்பந்தப்பட்ட ஊழியர் மகேஸ்வரனை தற்காலிக பணிநீக்கம் செய்ததோடு, இனி இதுபோல முறைகேட்டில் ஈடுபடும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.