News October 6, 2025
மழைக்காலத்தில் குடிக்க வேண்டிய மூலிகை தேநீர்!

மழைக்காலத்தில் ஏற்படும் இருமல், சளி, காய்ச்சல், கோழை, மூச்சிரைப்பு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் தூதுவளை தேநீரைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கைப்பிடி தூதுவளை இலை, சுக்கு, திப்பிலி, மிளகு, மஞ்சள், கிராம்பு, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் சுவையான தூதுவளை தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம். SHARE IT.
Similar News
News October 6, 2025
விலை புதிய உச்சம்.. ஒரே நாளில் ₹1000 உயர்வு..

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. 1 கிராம் வெள்ளியின் விலை ₹1 உயர்ந்து ₹166-க்கும், கிலோ வெள்ளி ₹1000 உயர்ந்து ₹1,66,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாளில் மட்டும் வெள்ளி விலை ₹5 ஆயிரம் அதிகரித்துள்ளது. விலை குறையும் என்று எதிர்பார்த்த நகை பிரியர்கள், விலை உயர்வால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
News October 6, 2025
ஹாஸ்பிடல் தீ விபத்தில் 8 பேர் பலி: மோடி இரங்கல்

ஜெய்ப்பூரில் உள்ள ஹாஸ்பிடலில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் ஏற்பட்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாகவும், காயமடைந்தோர் விரைந்து குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். மின்கசிவால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 6, 2025
கரூர் துயரம்: சற்றுமுன் அதிரடி கைது

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நீதிபதிகளை விமர்சித்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கரூர் சம்பவ வழக்கில், TVK கட்சி மற்றும் நிர்வாகிகள் குறித்தும், விஜய்யின் தலைமை பண்பு குறித்தும் ஐகோர்ட் நீதிபதி கடுமையாக சாடியிருந்தார். இந்நிலையில், நீதிபதிகளுக்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் விமர்சித்த முன்னணி நிறுவனத்தில் அதிகாரியாக இருக்கும் சசிகுமார் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.