News September 28, 2025
மூலிகை: கொடுக்காய்ப்புளியின் மருத்துவ குணங்கள்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, *கொடுக்காய்ப்புளியை தினமும் சாப்பிட்டு வந்தால், வாத நோய் ஏற்படாது *ஜீரண சக்தியை அதிகரிக்கும் *கொடுக்காய்ப்புளியின் பூ, பல்வலி, ஈறு பிரச்னைக்கு தீர்வளிக்கும் *தோல் அழற்சி, வீக்கம், அரிப்பு போன்றவற்றிலிருந்து பாதுகாக்க உதவுகிறது *வயிற்றின் அமிலத்தன்மையை குறைக்க உதவும் *கொடுக்காய்ப்புளியின் கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். SHARE.
Similar News
News September 28, 2025
BREAKING: விஜய் வீட்டில் போலீஸ், துணை ராணுவம்

விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தவெக தொண்டர்கள் அங்கு வந்த நிலையில், தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தவெகவினர் உள்ளிட்ட யாருக்கும் விஜய் வீட்டிற்குள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் அவ்வழியாக செல்வோர் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. துணை ராணுவமும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
News September 28, 2025
விரும்பியவருக்கு ஓட்டு போடுங்க.. கூட்டம் போடாதீர்கள்’

ஓட்டு போடுங்கள் – விரும்பும் நபர்களுக்கு, ஆனால் வாழ்வை தொலைக்க கூட்டம் போடாதீர்கள் என கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து நடிகர் பார்த்திபன் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது X தள பதிவில், 10 குழந்தைகள் பலியானதை சுட்டிக்காட்டி, இறுதி ஊர்வலத்தில் பிய்த்து எறியப்படும் பிஞ்சு பூக்களாய் குழந்தைகளை பலியாக்காதீர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
<<-se>>#karurstampede<<>>
News September 28, 2025
TN அரசு, போலீஸ் கடமை தவறிவிட்டது: EPS

விஜய்யின் கரூர் பரப்புரையில் TN அரசும், போலீசும் கடமை தவறிவிட்டதாக EPS சாடியுள்ளார். விஜய் பேசி கொண்டிருந்த போது தொடர்ந்து ஆம்புலன்ஸ் சென்றது சந்தேகத்தை கிளப்புகிறது என்றும், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பாதுகாப்பு வழங்கியிருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். தவெக கூட்டம் அறிவிக்கப்பட்ட போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று EPS பேசினார்.