News August 18, 2024

மூலிகை: தோல் நோய்களைப் போக்கும் நல்வேளை

image

நாட்பட்ட தோல் நோய்களை சரிசெய்யும் ஆற்றல் மாலை மங்கும் வேளையில் பூக்கும் நல்வேளை செடிக்கு இருப்பதாக சித்த நூல் கூறுகிறது. கெப்பாரிடேசியே, பீட்டா-கரோடீன், க்ளியோகைனால் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள அதன் இளம் இலைகளை தேங்காய் எண்ணெய்யில் வெள்ளைப் பூண்டோடு சேர்த்துக் காய்ச்சி, உடலுக்கு தேய்த்துக் குளித்தால் உடலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல், ஒவ்வாமை, பாக்டீரியா & பூஞ்சைத் தொற்றுக்கள் நீங்குமாம்.

Similar News

News November 26, 2025

பிரபல நடிகர் காலமானார்.. பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி

image

நடிகர் தர்மேந்திரா (89) மறைந்த அன்றே, அவரது இறுதிச்சடங்கு அவசர அவசரமாக நடந்ததால், பலரால் நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. இதனால், நேரில் செல்ல முடியாத நட்சத்திரங்கள், தற்போது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்த வார இறுதியில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் கூட்டம் நடைபெறும் என்றும், இதில் நட்சத்திர நடிகர்கள் பங்கேற்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

News November 26, 2025

அதிகார திமிர்: கம்பீரை தாக்கிய கோலியின் அண்ணன்

image

தெ.ஆ., எதிரான டெஸ்ட்டில் இந்தியா திணறுவதால் பலரும் கம்பீரை விமர்சிக்கின்றனர். இந்நிலையில், விராட் கோலியின் சகோதரர் விகாஸும் மறைமுகமாக கம்பீரை தாக்கியுள்ளார். ஒருகாலத்தில் வெளிநாட்டு மண்ணில் கூட அசால்ட்டாக வெற்றிபெற்ற IND அணி தற்போது சொந்த மண்ணில் திணறுவதாக கூறியுள்ளார். மேலும், ஒழுங்காக இருந்த விஷயங்களை மாற்றி, அதிகாரம் செலுத்த முயற்சித்த ஒருவரால்தான் இது நடந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

News November 26, 2025

அருணாச்சல் இந்தியாவின் பகுதியே: வெளியுறவுத் துறை

image

அருணாச்சல் சீனா உடையது எனக்கூறி, அம்மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை சீன அதிகாரிகள் பிடித்துவைத்த சம்பவம் பூதாகரமாகியுள்ளது. இதனையடுத்து, சாங்னான் தங்களுக்கு சொந்தமானது. இந்தியாவால் அருணாச்சல் என்று அழைக்கப்படுவதை அங்கீகரிக்க முடியாது என சீனா கூறியது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்த இந்தியா EAM அதிகாரி ரந்தீர் ஜெய்ஸ்வால், சீனா எவ்வளவு மறுத்தாலும், அருணாச்சல் இந்தியாவின் பகுதிதான் என கூறியுள்ளார்.

error: Content is protected !!