News August 9, 2024
மூலிகை: நுரையீரல் தொற்றை விரட்டும் கற்பூர வள்ளி

பருவமழைக் காலத்தில் குளிர் காரணமாக ஏற்படும் நுரையீரல் தொற்று & கோழையை சரிசெய்யும் ஆற்றல் கற்பூர வள்ளிக்கு இருப்பதாக அகத்தியரின் பாடல் கூறுகிறது. பி-சைமீன், தைமால் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள கற்பூர வள்ளி இலைகளை, ஏலம், கிராம்பு ஆகியவற்றுடன் சேர்த்து நீரிலிட்டுக் கொதிக்க வைத்து கஷாயமாக்கி தேன் கலந்துப் பருகினால் மாந்தம், இருமல், சளி, மலச் சிக்கல், தொண்டை கபம் போன்ற பிரச்னைகள் நீங்குமாம்.
Similar News
News December 3, 2025
திண்டிவனம் நகராட்சியில் ஆட்சியர் ஷேக்.அப்துல் ரஹ்மான் ஆய்வு

திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட வகாஃப் நகரில் உள்ள கருணாவூர் வாய்க்காலினை அகலப்படுத்துவது குறித்து ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (டிச.03) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திண்டிவனம் சார் ஆட்சியர் திரு.அ.ல.ஆகாஷ், திண்டிவனம் நகராட்சி ஆணையர் திருமதி.பானுமதி, நிண்டிவனம் வருணய் வட்டாட்சியர் திருயுவராஜ் உட்பட பலர் உள்ளனர்.
News December 3, 2025
பேய் மழை வெளுக்கும்.. 25 மாவட்டங்களில் அலர்ட்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என IMD கணித்துள்ளது. இதனால் சென்னை, செங்கை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தி.மலை, கடலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 3, 2025
தி.மலையில் தீபம் ஏற்ற உரிமை இவர்களுக்கு மட்டுமே உரிமை!

ஆண்டுதோறும் திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபத்தை ஏற்றும் உரிமை ஒரு வம்சத்தினருக்கு மட்டுமே உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், மலை உச்சியில் தீபம் ஏற்ற பர்வத ராஜகுலத்தினருக்கு (மீனவர்) உள்ள உரிமையாகும். இது, பண்டைய காலத்தில் சிவன் படையினராக இருந்த செம்படவர் சமூகத்தின் வழித்தோன்றல்களாக இவர்களை கருதுவதனால் வழங்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.


