News August 24, 2025
ஜாம்பவான்களின் வாரிசு… அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும்

புகைப்படத்தில் உள்ள இருவரையும் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். இவ்விருவரின் தந்தையும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு காலம் கடந்த பெருமை சேர்த்த ஜாம்பவான்கள். பேட் வைத்திருப்பர் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவின் மகன் ரனுக், சுழற்பந்து வீசுபவர் முத்தையா முரளிதரனின் மகன் நரேன். உள்ளூர் போட்டியில் இருவரும் விளையாடிய புகைப்படம் இது. இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் பாதுகாப்பான கைகளிலேயே உள்ளது.
Similar News
News August 25, 2025
நிறம் மாறும் விநாயகர்.. அற்புத கோயில்!

நாகர்கோவில் அருகே உள்ள கேரளபுரம் என்ற கிராமத்தில் அதிசய விநாயகர் கோயிலில், விநாயகரின் சிலை 6 மாதத்திற்கு ஒரு முறை நிறம் மாறுகிறது. மார்ச் – ஜூனில் விநாயகர் கருப்பாகவும், ஜூலை – பிப்ரவரியில் விநாயகர் வெள்ளை நிறமாகவும் மாறுகிறார் என கூறப்படுகிறது. மேலும், கோயில் கிணற்றின் நீர், விநாயகர் வெள்ளையாக இருக்கும் போது கருப்பாகவும், விநாயகர் கருப்பு நிறமாக இருக்கும்போது வெள்ளை நிறமாகவும் மாறுகிறதாம்.
News August 25, 2025
அதிமுக கூட்டணியில் இல்லை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ADMK கூட்டணியில் இல்லை என உறுதிபட தெரிவித்துள்ள கிருஷ்ணசாமி அப்படி ஒரு கூட்டணி இருக்கிறதா என கிண்டல் செய்துள்ளார். விஜய்யின் மதுரை மாநாடு நல்ல எழுச்சி என புகழாரம் சூட்டினார். மேலும், அங்கிள் என கூறியது தவறு என்றால் டாடி, BRO என கூறுவது சரியா என கேள்வி எழுப்பினார். அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த புதிய தமிழகம் வரும் தேர்தலில் தவெகவுடன் இணையலாம் என பேசப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
News August 25, 2025
நாடாளுமன்றத்தை முடக்குவது நல்லதல்ல: அமித்ஷா

சிலரின் அரசியல் ஆதாயத்துக்காக நாடாளுமன்றத்தை முடக்குவது நல்லதல்ல என அமித்ஷா தெரிவித்துள்ளார். சட்டசபை சபாநாயகர்கள் மாநாட்டில் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் விவாதங்கள் குறைந்தால் தேசத்தின் வளர்ச்சியில், அதன் பங்களிப்பு பாதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் நிதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்த அவர், ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் அவையை நடத்த அனுமதிக்காமல் இருப்பது நல்லதல்ல என தெரிவித்தார்.