News March 6, 2025
ஹீரா கோல்டு மோசடி: சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி

ஹீரா கோல்டு நிறுவனம் 36% வரை லாபம் தருவதாக கூறி, நாடு முழுவதும் வலைவிரித்து முதலீட்டாளர்களை ஈர்த்தது. கோடிக்கணக்கில் பணம் சேர்ந்ததும் முதலீட்டாளர்களை ஏமாற்றத் தொடங்கியதால், நிர்வாக இயக்குநர் நெளஹெரா ஷேக் கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் 3 மாதத்தில் ₹25 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும், இல்லையென்றால் சிறைக்கு செல்ல நேரிடும் என எச்சரித்திருக்கிறது.
Similar News
News December 3, 2025
குமரி: தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

குளச்சல் அருகே பன விளை சேர்ந்தவர் ஞானசௌந்தரி (64) இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் ஆனப்பாங்குழியில் உள்ள அக்கா வீட்டில் அவரது பராமரிப்பில் இருந்து வந்தார். இவர் பலா மர இலைகளை பறிப்பதற்காக பக்கத்து வீட்டு மாடியில் ஏறிய போது கீழே விழுந்த அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக குளச்சல் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News December 3, 2025
ஐரோப்பாவுடன் போர் செய்ய ரெடி: புடின்

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த USA போட்ட டீல் ரஷ்யாவுக்கு சாதகமாக இருப்பதாக ஐரோப்பா விமர்சித்திருந்தது. இதனால் அதில் சில மாற்றங்களை செய்திருந்தது USA. இதனால் கடுப்பான புடின், ரஷ்யாவால் ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை வரையறுக்க USA-வை ஐரோப்பாவை தூண்டுவதாக விமர்சித்துள்ளார். மேலும், ஐரோப்பாவுடன் போர்புரியும் எண்ணம் இல்லை என்ற அவர், ஆனால் போர்தான் வேண்டுமென்றால் அதற்கும் ரெடி என எச்சரித்துள்ளார்.
News December 3, 2025
கனமழை… அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு

கனமழை எதிரொலியாக அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு வெளியாகி வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாணவர்கள் பாதுகாப்பு கருதி கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


