News August 14, 2024
சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சுதந்திர தினம், வரலட்சுமி விரதம், சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை வருவதால், சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதன் காரணமாக, ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை புறநகர் பேருந்து நிலையம் அமைந்திருக்கும் கிளாம்பாக்கம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு வரை வாகனங்கள் ஊர்ந்தே செல்கின்றன.
Similar News
News December 5, 2025
சற்றுமுன்: விஜய் அதிரடி உத்தரவு

பூத் முகவர், SIR பணிகள் உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் குறித்து தவெக நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க விஜய் முடிவு செய்துள்ளார். அதன்படி, தவெகவின் கிளை நிர்வாகிகளை நேரில் அழைத்து டிச.6, 7 ஆகிய தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், பூத் என்றால் என்ன?, SIR என்றால் என்ன? என்பது பற்றியும், உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
News December 5, 2025
சங் பரிவார் அமைப்புகளுக்கு பா.ரஞ்சித் எச்சரிக்கை

தமிழகத்தில் மதவாத அரசியலை துவங்குவதற்கான வாய்ப்பை பாஜகவும், அதன் சங் பரிவார் அமைப்புகளும் கடந்த ஓராண்டாக உருவாக்கி வந்ததாக பா.ரஞ்சித் குற்றஞ்சாட்டியுள்ளார். பன்முகத்தன்மையை பாஜக, சங் பரிவார் அமைப்புகள் சிதைக்கிறது என்றும் விமர்சித்துள்ளார். சிறுபான்மை சமூகங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இந்த அமைப்புகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அரசை வலியுறுத்தியுள்ளார்.
News December 5, 2025
எறும்புகளுக்கு சர்க்கரை நோய் வரலையே எப்படி?

சொல்லப்போனால் மனிதர்களை விட எறும்புகள்தான் அதிகமாக சர்க்கரை சாப்பிடுகின்றன. ஆனால் அவற்றுக்கு சர்க்கரை நோய் வருவதே இல்லை. காரணம், அவற்றின் உடல் அமைப்பு சர்க்கரையை உடனுக்குடன் குளுக்கோஸாக மாற்றி எனர்ஜியாக கன்வர்ட் செய்கிறது. இந்த எனர்ஜியை பயன்படுத்தியே எறும்புகள் எப்போதும் சுறுசுறுப்பாக உழைக்கின்றன. தேவைக்கேற்ப சர்க்கரை எடுத்துக்கொண்டு சுறுசுறுப்பாக இயங்கினால் நமக்கும் பிரச்னை இல்லை. SHARE.


