News December 8, 2024
இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. இதன் தாக்கத்தால் வரும் 10ஆம் தேதி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்பின், தமிழகத்தில் கனமழையானது 3 நாள்களுக்கு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 14, 2025
சர்க்கரையை குறைக்க Sugar Diet மட்டும் போதுமா?

நம்மில் பெரும்பாலானோர் ரத்த சர்க்கரை நோய்க்கு ஆளாகாமல் இருக்க Sugar Diet இருப்பதுண்டு. ஆனால் உணவு மட்டுமே சர்க்கரை நோய் வர காரணம் கிடையாது. நாள்பட்ட மன அழுத்தம், ஒழுங்கற்ற தூக்கம், அதீத உடற்பயிற்சி, ஹார்மோன் மாற்றங்களும் சர்க்கரையை அதிகரிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வெறும் sugar diet மட்டும் இல்லாமல் இவை அனைத்தையும் நீங்கள் சமாளித்தால் சர்க்கரை நோயில் இருந்து தப்பிக்கலாம்.
News August 14, 2025
வலுப்பெற்ற காற்றழுத்தம்.. 7 நாள்கள் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திரா இடையே நாளை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் ஆக. 20-ம் தேதி வரை கன முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, தேனியில் இன்று மழை பெய்யக்கூடுமாம். உங்க பகுதியில் இப்போ மழையா?
News August 14, 2025
அஜித் உடன் இணையத் தயார்: லோகேஷ்

புதுமுகங்கள் மூலம் அறிமுகமான லோகேஷ், கைதி திரைக்கதை மூலம் டாப் ஹீரோக்களை திரும்பி பார்க்க வைத்தார். அடுத்தடுத்து விஜய், கமல், ரஜினி ஆகிய முன்னணி நடிகர்களுடன் இணைந்தும் ஹிட் கொடுத்துள்ளார். இந்த வரிசையில் அஜித்துடன் அவர் இணைய வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், எப்போது அதற்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது படம் பண்ணுவேன் என்று லோகேஷ் கூறியுள்ளார். தெறிக்கவிடலாமா!