News June 28, 2024
கனமழை படிப்படியாக குறையும்

தென் மாநிலங்களில் கனமழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கர்நாடகா, கேரளாவில் நாளை முதல் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாகவும், தென்மேற்கு பருவமழை வலுவிழக்கப் போவதால் சென்னையில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகா, உத்தரகாண்ட், கோவா, ஒடிசாவிற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 13, 2025
FLASH: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

தங்கம், வெள்ளி விலை இந்த வாரத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த வார வர்த்தக முடிவில், சென்னையில் 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹98,960 ஆக உள்ளது. இது கடந்த வாரத்துடன் (டிச.6-ல் 1 சவரன் ₹96,320) ஒப்பிடுகையில் ₹2,640 அதிகமாகும். தங்கத்திற்கு சற்றும் சளைக்காமல், வெள்ளி விலை இந்த வாரத்தில் மட்டும் ₹11,000 அதிகரித்துள்ளது. தற்போது, 1 கிலோ வெள்ளி ₹2.10 லட்சத்திற்கு விற்கப்பட்டு வருகிறது.
News December 13, 2025
இது சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்: ராகுல்

கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்., தலைமையிலான UDF கூட்டணி கணிசமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இது ஒரு தீர்க்கமான தீர்ப்பு என ராகுல் காந்தி கூறியுள்ளார். கேரளாவில் UDF மீதான நம்பிக்கை வளர்ந்து வருவதற்கான சிறப்பான அறிகுறியாக இந்த தேர்தல் முடிவு உள்ளதாக குறிப்பிட்டுள்ள ராகுல், இது வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலின் வெற்றிக்கு வழிவகுக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
மக்கள் நாயகன் காலமானார்… கண்ணீருடன் இரங்கல்

மனிதனுக்கு மனிதனே உதவ முன்வராத அவசர காலத்தில், கிளிக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த <<18542461>>ஜோசப் சேகர்<<>>(73) இப்போது பூவுலகில் இல்லை. புற்றுநோய் பாதிப்பால் மறைந்த அவர், பல்லாயிரக்கணக்கான கிளிகளை அனாதையாக விட்டுச் சென்றிருக்கிறார். ஜோசப் சேகரின் மறைவுக்கு அரசியல் கட்சிகள், பறவைகள் நல ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த பறவை மனிதரின் வாழ்க்கை பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என்பதே நிதர்சனம்.


