News September 18, 2025
21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 3, 2026
ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சரும் படுகொலை

இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் ஏவுகணை தாக்குதலில் ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சரான சையத் மஜீத் எப் அல்-ரேசாவும் கொல்லப்பட்டுள்ளார். இஸ்ரேல், US-ன் நடத்திய முதல்நாள் தாக்குதலில் ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் <<19266093>>அமீர் நசீர்சாதே கொல்லப்பட்டார்<<>>. இதனையடுத்து பதவியேற்ற மறுநாளிலேயே சையத் மஜீத் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும் ஈரான் அரசு இதனை இன்னும் உறுதிபடுத்தவில்லை.
News March 3, 2026
சங்கீதா விவாகரத்தில் ட்விஸ்ட்.. மொத்தமாக மாறுகிறது

விஜய் – சங்கீதா விவாகரத்து செய்தி தமிழகத்தின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. சங்கீதாவுடன் விஜய் தரப்பு சமரசப் பேச்சு நடத்தி வருவதாக இன்று தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், விஜய்யின் சமரசத்தை ஏற்று சங்கீதாவும் விவாகரத்து மனுவை வாபஸ் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுதொடர்பாக இருதரப்பினரிடம் இருந்தும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போதுவரை வெளியாகவில்லை.
News March 3, 2026
இன்று சந்திர கிரகணம்: தம்பதியர் ஒன்று சேரலாமா!

சந்திர கிரகணத்துக்கு முன்பு 9 மணிநேரமும், கிரகணத்தின் போதும் பூமியின் சூழல் அசுத்தமாவதாக இந்துமத நம்பிக்கை கூறுகிறது. இந்நேரத்தில் பல்வேறு விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. அவ்வகையில், தம்பதியர் உறவில் ஈடுபடுவதையும் கிரகணம் முடியும்வரை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், உறவில் ஈடுபடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என டாக்டர்கள் கூறுகின்றனர்.


