News October 17, 2025
19 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 18, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 492 ▶குறள்: முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந் தரும். ▶பொருள்: பகை உணர்வுகள் நிறைந்தும், ஆற்றலில் மிகுந்தும் இருப்பவர்க்குப் பாதுகாப்பான இடத்துள் இருப்பது பல பயன்களையும் தரும்.
News October 18, 2025
இந்து பெண்கள் ஜிம்முக்கு போக கூடாது: பாஜக MLA

பெண்கள் குறித்து மகாராஷ்டிரா பாஜக MLA கோபிசந்த் பதல்கர் பேசியது பேசுபொருளாகியுள்ளது. இந்து பெண்கள் ஜிம்முக்கு போக கூடாது, அங்குள்ள பயிற்சியாளர் யார் என்றே தெரியாமல், சிரித்து பேசி ஏமாற்றிவிடுவார்கள் என அவர் கூறியுள்ளார். மேலும், ஜிம்முக்கு பதிலாக வீட்டில் யோகா செய்வதே சிறந்தது என்றும் அறிவுறுத்தியுள்ளார். MLA-ன் இந்த பேச்சு சர்ச்சையாகியுள்ளது.
News October 18, 2025
International Roundup: 9 சீன ராணுவ தளபதிகள் டிஸ்மிஸ்

*உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, டிரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். *காசாவில் இடைக்கால அரசு அமைந்தாலும், ஆயுதங்களை கீழே போட மாட்டோம் என ஹமாஸ் அறிவிப்பு. *அமெரிக்காவும், சீனாவும் வர்த்தக போரை நிறுத்த வேண்டும் என WTO கேட்டுக்கொண்டுள்ளது. *மடகாஸ்கரில் ராணுவ கர்னல் மைக்கெல் ரந்திரியனிரினா அதிபராக பொறுப்பேற்றார். *சீன கம்யூனிஸ்ட் கட்சி 9 ராணுவ தளபதிகளை டிஸ்மிஸ் செய்துள்ளது