News October 9, 2025
10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. எனவே, வெளியே சென்றால் மறக்காமல் குடையுடன் செல்லுங்கள்.
Similar News
News October 9, 2025
வர்த்தகம் தொடர்பாக மோடியை சந்திக்கும் பிரிட்டன் PM

2 நாள் பயணமாக இந்தியா வந்திருக்கும் பிரிட்டன் PM கீர் ஸ்டார்மரை, மும்பையில் PM மோடி சந்தித்து பேச உள்ளார். சமீபத்தில் பிரிட்டன் சென்றிருந்த PM மோடி, அந்நாட்டுடன் தடையற்ற வர்த்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்தார். அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் பேசப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இருவரும் இணைந்து Global Fintech Fest என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்கின்றனர்.
News October 9, 2025
21 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி, தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், விழுப்புரம், குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. உங்கள் ஊரில் மழையா? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 9, 2025
விஜய்யை அடிமை என சொன்னாரா உதயநிதி?

பழைய அடிமை EPS மட்டுமின்றி, இப்போது புது அடிமைகளையும் பாஜக வலைவீசி தேடுவதாக DCM உதயநிதி விமர்சித்துள்ளார். நான் யாரை சொல்கிறேன் என்று உங்களுக்கு தெரியும் என பொடிவைத்து பேசிய அவர், அதிமுகவின் துணையோடு பாஜக அனைத்தையும் செய்வதாக கூறினார். மேலும், எத்தனை அடிமைகள் வந்தாலும் கருப்பு, சிவப்பு அணிந்திருக்கும் திமுககாரன் இருக்கும் வரை தமிழகத்தை தொட்டுக்கூட பார்க்கமுடியாது என அவர் சவால்விட்டிருக்கிறார்.