News August 5, 2025

10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

image

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேனி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30-40 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என்றும் IMD எச்சரித்துள்ளது.

Similar News

News August 5, 2025

WOW! காலையில் உங்களுக்கு மகிழ்ச்சி செய்தி

image

காலையில் சீக்கிரமாக எழுபவர்களின் உற்பத்தித் திறனும் ஆற்றலும் அதிகமாக உள்ளதாக பல்வேறு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இவர்கள் ஆரோக்கியத்துடன் அதிக மகிழ்ச்சியாக, நாள் முழுதும் ஆற்றலுடன் இருப்பதுடன், இவர்களுக்கு மனநல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. ஆனால், தாமதமாக தூங்கி, காலையில் தாமதமாக எழுபவர்களுக்கு மனச்சோர்வுடன், சில மனநல பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நீங்கள் எப்படி?

News August 5, 2025

டேல் ஸ்டெயின் கேட்டதை கொடுத்த சிராஜ்

image

கடைசி டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் சிராஜ் 5 விக்கெட்டுகள் எடுப்பார் என டேல் ஸ்டெயின் கணித்திருந்தார். 5-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டை மட்டுமே சிராஜ் எடுத்தார். ஆனால், 2-வது இன்னிங்சில் அசாத்தியமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை சிராஜ் வீழ்த்தினார். வெற்றிக்கு பின் நீங்கள் கேட்டதை கொடுத்துட்டேன் என டேல் ஸ்டெயினுக்கு, X பக்கத்தில் சிராஜ் பதில் அளித்துள்ளார்.

News August 5, 2025

அன்புமணிக்கு ஒன்னும் தெரியாது: துரைமுருகன் பதிலடி

image

‘தமிழக மக்கள் உரிமை மீட்புப் பணம்’ மேற்கொண்டு வரும் அன்புமணி, அமைச்சர் துரைமுருகனை கடுமையாக சாடியிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அன்புமணி கொஞ்சம் விவரமானவர் என்று இதுநாள் வரை நினைத்திருந்தேன். ஆனால், சமீபத்தில் என் மீது அவர் சாட்டிய தவறான குற்றச்சாட்டிலிருந்து அவருக்குக் கொஞ்ச நஞ்ச விவரம் கூடத் தெரியாது என்று நிரூபித்திருக்கிறார் என துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.

error: Content is protected !!