News February 28, 2025
வெளுத்து வாங்கும் கனமழை.. AUS-AFG போட்டி நிறுத்தம்

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வந்த ஆஸி., ஆப்கன் இடையிலான ஆட்டம் மழையால் தடைபட்டுள்ளது. லாகூரிலுள்ள மைதானத்தில் முதலில் விளையாடிய ஆப்கன் அணி, 273 ரன்களை எடுத்தது. 274 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸி., அணி 12.5 ஓவர்களில் 109/1 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. கனமழை வெளுத்து வாங்கி வருவதால் பிட்ச் முழுவதும் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது.
Similar News
News March 1, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச்.1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News March 1, 2025
அமெரிக்க குற்றவாளி ஆனார் பைஜூஸ் ரவீந்திரன்

இந்திய தொழில் முனைவரான பைஜூஸ் ரவீந்திரனை அமெரிக்க நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்துள்ளது. அவர் தலைமையிலான பைஜூஸ் நிறுவனம், அமெரிக்காவில் 533 மில்லியன் டாலர் பணத்தை கையாடல் செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருடன் கேம்ஷாப்ட் என்ற நிதி நிறுவனமும் மோசடியில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனைகளை ரவீந்திரன் மறைக்க முயற்சித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
News March 1, 2025
சீமானிடம் விசாரணை நிறைவு

நடிகை பாலியல் புகார் தொடர்பாக சீமானிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. இரவு 10 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தொடங்கிய விசாரணை இரவு 11.15 மணிக்கு நிறைவடைந்தது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், காவல்துறையினர் அப்படியான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் சீமான் பேட்டியளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.