News May 29, 2024

9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

image

தமிழகத்தில் ஜூன் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கேரளாவில் 1ஆம் தேதி பருவமழை தொடங்கவிருப்பதால் அதன் தாக்கம் தமிழகத்தில் காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 18, 2025

கால் வலி நீங்க காலையில் இந்த யோகா பண்ணுங்க!

image

சுப்த பாதாங்குஸ்தாசனம் செய்வது முதுகு, இடுப்பு & கால்தசைகளை வலுவாக்கும்.
*கால்களை நேராக நீட்டி படுக்கவும் *வலது காலை மடித்து, மார்பு வரை கொண்டு வந்து, வலது பெருவிரலால் பிடித்து கொள்ளவும் *இப்போது காலை மேல் நோக்கி நேராக நீட்டவும் *உதவிக்கு யோகா பட்டையை பயன்படுத்தலாம் *இந்தநிலையில், 15- 20 விநாடிகள் வரை இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். இதே போல, காலை மாற்றி செய்யவும். SHARE IT.

News September 18, 2025

இனி அவர் முகமூடியார் பழனிசாமி: TTV

image

எடப்பாடி பழனிசாமியை இனிமேல் முகமூடியார் பழனிசாமி என அழைக்க வேண்டும் என்று TTV தினகரன் விமர்சித்துள்ளார். EPS செய்யும் துரோகத்தை சிலர் ராஜதந்திரம் என நினைப்பதாகவும், MGR, ஜெயலலிதா வெற்றிகண்ட இரட்டை இலை சின்னத்தை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்ற பார்ப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், என்னதான் பண பலம், படை பலம் இருந்தாலும் வரும் தேர்தலில் தோல்வியை தழுவுவது உறுதி எனவும் தெரிவித்துள்ளார்.

News September 18, 2025

புரட்டாசி மாதத்தின் சிறப்பான பெருமாள் வழிபாடு!

image

அதிகாலை பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்து நீராடி, நெற்றியில் பெருமாளுக்குரிய திருநாமம் இட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் வீட்டிலுள்ள பெருமாள் படத்திற்கு, வடை மாலை சாற்றி, நைவேத்தியமாக புளி சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், வடை, சுண்டலை படைக்கலாம். மாவிளக்கு போட வேண்டும். தேங்காய் உடைத்து சாமிக்கு பூஜை செய்ய வேண்டும். பிறகு, ‘கோவிந்தா.. கோவிந்தா..’ என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும். SHARE.

error: Content is protected !!