News September 28, 2024

19 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

image

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் (RMC) கணித்துள்ளது. அதன்படி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், திருச்சி, தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.

Similar News

News December 30, 2025

BREAKING: மீண்டும் கைது.. பதற்றம் உருவானது

image

சென்னை கருணாநிதி நினைவிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து அவர்கள் போராட்டம் நடத்தினர். போலீசார் குண்டுகட்டாக கைது செய்த நிலையில், அவர்களில் சிலர் மயக்கமடைந்தனர். முன்னதாக, இன்று காலை அறிவாலயத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட <<18711270>>தூய்மை பணியாளர்கள் கைது<<>> செய்யப்பட்டனர்.

News December 30, 2025

CM ஸ்டாலினுக்கு மாரி செல்வராஜ் கோரிக்கை!

image

<<18693605>>திருத்தணியில்<<>> வடமாநில தொழிலாளி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். மனித சமூகத்தின் மதிப்பு புரியாமல் தடம்புரண்டு அலையும் இளைஞர்களை நேர்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க அவர் கோரியுள்ளார். போதை கலாசாரம், சாதி, மத, தாதாயிச தனிநபர் பெருமை ஆகியவற்றின் மீது CM ஸ்டாலின் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்து, அடுத்த தலைமுறையை நெறிப்படுத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News December 30, 2025

நாடு முழுவதும் நாளை முடங்குகிறது

image

நாடு முழுவதும் நாளை (டிச.31) ஸ்விக்கி, சோமாட்டோ, செப்டோ, பிளிங்கிட் டெலிவரி ஊழியர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட உள்ளனர். ஊதிய உயர்வு கோரி இந்த போராட்டத்தை அவர்கள் முன்னெடுக்கின்றனர். இதனால், இந்த நிறுவனங்களின் டெலிவரி சேவை முடங்கலாம் என கூறப்படுகிறது. எனவே, புத்தாண்டுக்கு தேவையான பொருள்களை இன்றே ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளுங்கள்.

error: Content is protected !!