News August 4, 2024
இந்த மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை
பெய்யக்கூடும் என, வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, ராணிப்பேட்டை, காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறையில் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து, நாளை நீலகிரி, கோவை, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
Similar News
News January 4, 2026
பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன கிடைக்கும்?

பொங்கல் பரிசில் ₹3,000 ரொக்க பணத்தோடு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு, வேட்டி & சேலை ஆகியவை வழங்கப்படவுள்ளன. இவை அனைத்தும் பொங்கலுக்கு முன்பாக நியாயவிலை கடைகள் வழியாக மக்களுக்கு விநியோகிக்கப்பட அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கியுள்ளது. இன்று முதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் நிலையில், அதில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் ரேஷன் கடைக்கு நேரில் சென்று நீங்கள் பெற்றலாம்.
News January 4, 2026
இவர்களுக்கு பொங்கல் பணம் ₹3,000 கிடைக்காது

தமிழகத்தில் சர்க்கரை ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள், தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை புதிய ரேஷன் கார்டுகள் தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. ஒருவேளை பொங்கலுக்கு முன் அவர்களின் ரேஷன் கார்டுகள் Activate ஆகவில்லை என்றால், லட்சக்கணக்கானோருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் ரொக்கப்பணம் ₹3,000 கிடைக்காது என கூறப்படுகிறது.
News January 4, 2026
அரசு ஊழியர்களை தெருவில் நிறுத்தியது BJP: பெ.சண்முகம்

TN அரசு அறிவித்த ஓய்வூதியத் திட்டத்தை ‘ஏமாற்று வேலை’ என கூறிய நயினாருக்கு CPI(M) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்துக்கட்டி, ஆசிரியர், அரசு ஊழியர்களை நடுத்தெருவில் நிறுத்தியது BJP ஆட்சிதான் என்று சாடிய அவர், நாடு முழுவதும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை BJP அமல்படுத்தும் என்று கூறும் தைரியம் நயினாருக்கு இருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.


