News August 4, 2024
இந்த மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை
பெய்யக்கூடும் என, வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, ராணிப்பேட்டை, காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறையில் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து, நாளை நீலகிரி, கோவை, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
Similar News
News November 21, 2025
மூளையை வசப்படுத்தும் செயல்பாடுகள்

மூளையை வசப்படுத்த, வாழ்க்கை முறையைச் சீராக வைத்திருப்பது அவசியம். கவனம், நினைவாற்றல், தெளிவான சிந்தனை உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதன் மூலம், நம்மை நாமே வசப்படுத்தலாம். மூளை வசப்பட்டால், வானமும் வசப்படும். இதற்கு என்னென்ன செயல்பாடுகள் உதவுகின்றன என்பதை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 21, 2025
FLASH: தங்கம் விலை தடாலடியாக குறைந்தது

ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாள்களாக மக்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது. 1 சவரன் நேற்று ₹800 குறைந்த நிலையில், இன்று மேலும் ₹320 சரிந்துள்ளது. தற்போது சென்னையில், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,460-க்கும், 1 சவரன் ₹91,680-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், வெள்ளி விலையும் கடந்த 2 நாள்களில் கிலோவுக்கு ₹7,000 குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
News November 21, 2025
BREAKING: அதிமுக எம்எல்ஏ கொலை.. பரபரப்பு தீர்ப்பு

2005-ல் கும்மிடிப்பூண்டி MLA-வாக இருந்த சுதர்சனம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பவாரியா கும்பலில் 3 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தண்டனை விவரம் நவ.24-ல் தெரிவிக்கப்படும் என சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதுதான் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படமாகும்.


