News October 20, 2024
இன்று, நாளை, 24ஆம் தேதி கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று, நாளை, 24ஆம் தேதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த மாவட்டங்கள் என பார்க்கலாம் *இன்று: தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் *நாளை: கோவை, திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், பெரம்பலூர் *24ஆம் தேதி: சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை.
Similar News
News September 4, 2025
அரசியலில் இருந்து விலகும் செங்கோட்டையன்?

செங்கோட்டையன் நாளை என்ன பேசப்போகிறார் என்பதுதான் அரசியல் களத்தில் விவாதமாக மாறியுள்ளது. 9 முறை MLA, MGR, ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற தலைவர், 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் என செங்கோட்டையனின் அரசியல் வாழ்க்கை மிக நீண்டது. ஆனாலும், EPS உடனான அதிருப்தி காரணமாக மீண்டும் சசிகலா, டிடிவி, OPS இணைப்பு (அ) அரசியலில் இருந்து விலகல் என இந்த 2 முடிவில் ஏதேனும் ஒன்றையே அவர் எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
News September 4, 2025
4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

கோவை, நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்தது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 7-ம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
News September 4, 2025
Parenting: குழந்தைகளின் தவறுகளை சரி செய்வது எப்படி?

பெற்றோர்கள் குழந்தைகளின் சிறிய தவறுகளை கவனித்திருப்பீர்கள். இந்த தவறுகளை சரி செய்ய வேண்டும் என கண்டித்தால், அதை எப்போதும் அவர்கள் திருத்திக்கொள்ள மாட்டார்கள். மாறாக, இந்த 3 எளிய வழிகளை நீங்கள் செய்து பார்க்கலாம். ➤எந்த மாதிரியான சூழலில் தவறு செய்கிறார்கள் என கவனித்து, அதை பொறுமையாக எடுத்துரையுங்கள். ➤எப்படி சரி செய்யலாம் என சொல்லி கொடுங்கள் ➤தவறை திருத்திக் கொண்டால் பாராட்டுங்கள். SHARE.