News May 10, 2024
மே 14ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மே 11ஆம் தேதி 8 மாவட்டங்களிலும், மே 12ஆம் தேதி 9 மாவட்டங்களிலும், மே 13ஆம் தேதி 10 மாவட்டங்களிலும், மே 14ஆம் தேதி 8 மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேபோல, சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 8, 2025
டாப் 10 மகிழ்ச்சியான நகரங்கள்.. நம்பர் 1 எது பாருங்க

ஆசியாவில் மிகவும் மகிழ்ச்சியான நகரம் எது தெரியுமா? நம்பர் 1 இடம் உங்களை ஆச்சரியப்படுத்தும். ஆசிய நகரங்களில் 18,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களிடம் டைம் அவுட் நடத்திய கணக்கெடுப்பின்படி, 2025-ம் ஆண்டிற்கான ஆசியாவின் டாப் 10 மகிழ்ச்சியான நகரங்கள் பட்டியிடப்பட்டுள்ளன. அவை என்னென்ன நகரங்கள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT
News November 8, 2025
சீமானின் பொது சேவை தொடர EPS வாழ்த்து

சீமானின் பிறந்தநாளையொட்டி EPS அவருக்கு இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். நீண்ட ஆயுள் மற்றும் உடல் நலத்துடன், தொடர்ந்து பொது சேவையாற்றிட இறைவனை வேண்டுவதாக, தனது X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அரசியலில் எதிர் எதிர் நிலைப்பாட்டில் இருந்தாலும், அவரின் மீது உள்ள தனிப்பட்ட மரியாதையின் காரணமாக EPS வாழ்த்து தெரிவித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
News November 8, 2025
இந்திய நிறுவனம் மீது தடை விதித்தது உலக வங்கி

இந்தியாவின் முன்னணி மின்மாற்றி உற்பத்தி நிறுவனமான TARIL India மீது, உலக வங்கி தடை விதித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும், உலக வங்கியின் நிதியுதவி பெறும் எந்த திட்டத்திலும் 2029-ம் ஆண்டு வரை இந்த நிறுவனம் பங்கேற்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


