News September 26, 2024
தமிழகத்திற்கு 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் 3 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை மையம் (RMC) எச்சரித்துள்ளது. தமிழகத்தில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது. 28ம் தேதி கோவை, வேலூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களிலும், 29ம் தேதி 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என கூறியுள்ளது. SHARE IT
Similar News
News August 12, 2025
Asia Cup.. பெஸ்ட் பிளேயிங் XI எது?

செப்டம்பரில் தொடங்கும் Asia Cup-ல் யார் யார் விளையாடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அபிஷேக் சர்மா, கில், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா, ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஜுரெல், அக்சர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 19 அல்லது 20-ம் தேதி அணி அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. நீங்க ஒரு பெஸ்ட் பிளேயிங் XI-யை கமெண்ட் பண்ணுங்க?
News August 12, 2025
CM பொறுப்புடன் பேச வேண்டும்: நயினார் கண்டனம்

வாக்கு மோசடியில் ECI ஈடுபட்டதாக <<17367499>>ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுக்கு <<>>நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ECI-யின் மீது குற்றம்சாட்டுவது அரசியலமைப்பை அவமதிப்பதற்கு சமம் என தெரிவித்த அவர், CM பொறுப்புடன் பேச வேண்டும் என வலியுறுத்தினார். வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் குறித்து ECI கேட்ட விளக்கத்துக்கு ராகுல் பதில் அளிக்காமல், அதை நியாயப்படுத்த முயல்வது தவறு எனவும் விமர்சித்துள்ளார்.
News August 12, 2025
BREAKING: ஸ்டிரைக் தொடரும்.. தமிழக அரசுக்கு நெருக்கடி

பணி நிரந்தரம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. இதனால், பல லட்சம் பேர் வந்து செல்லும் பொதுவிடத்தில் தூய்மைப் பணியாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருவதால், தமிழக அரசுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது. இதனால், உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு தரப்பில் சற்றுமுன் அழைப்பு விடுத்தது. ஆனால், அதை புறக்கணித்த தூய்மைப் பணியாளர்கள், ஸ்டிரைக் தொடரும் என அறிவித்துள்ளனர்.