News September 10, 2025
12 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, ஈரோடு, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் மழை நேரத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
Similar News
News September 10, 2025
சோஷியல் மீடியாக்களை தடை செய்த நாடுகள் பட்டியல்

சமூக வலைதளங்களை தடை செய்ததற்கு எதிரான போராட்டம், அதிபர், பிரதமர் ஆகியோர் பதவி விலக காரணமாக இருந்ததை நேபாளத்தில் நாம் பார்த்துள்ளோம். இந்நிலையில், இதுபோன்ற தடைகள் இதற்கு முன்பும் சில நாடுகளில் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றில் சில நாடுகளில் தடை இன்னும் அமலிலே உள்ளது. அப்படிப்பட்ட நாடுகள் எவை, எதற்காக தடை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து மேலே உள்ள படங்களில் பார்க்கலாம்.
News September 10, 2025
டைம் ஓவர்.. அன்புமணி மீது பாயவுள்ள நடவடிக்கை?

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி விளக்கமளிக்க, ராமதாஸ் விதித்த கெடு இன்றோடு நிறைவடைகிறது. ஏற்கனவே விதிக்கப்பட்ட கெடுவில் அன்புமணி விளக்கமளிக்கவில்லை. தற்போது, மீண்டும் கெடு வழங்கியும் அதை அன்புமணி கண்டுகொள்ளாமல் இருப்பதால் ராமதாஸ் உச்சக்கட்ட டென்ஷனில் இருக்கிறாராம். இதனால், அவர் மீது தற்காலிக பொறுப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
News September 10, 2025
BREAKING: தங்கம் விலை.. நிம்மதியான செய்தி

கடந்த சில நாள்களாக அதிகரித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த 2 நாளில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,160 உயர்ந்தது. இதனால், இன்றும் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹10,150-க்கும், 1 சவரன் ₹81,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், நகை பிரியர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.