News May 24, 2024
காலை 10 மணி வரை கனமழை

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருப்பூர், கோவை, தென்காசி, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட், குமரி, புதுக்கோட்டை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மேற்குத் தொடர்ச்சி மாவட்டச் சுற்றுலாத் தலங்களுக்கு செல்வோர் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News August 17, 2025
திருமா மரியாதையை காப்பாத்தனும்: EPS அறிவுரை

திமுகவின் பாவமூட்டைகளை திருமாவளவன் சுமக்க வேண்டாம் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். செங்கம் பகுதியில் மக்கள் மத்தியில் பேசிய அவர், மக்கள் மத்தியில் திருமாவளவனுக்கு ஒரு மரியாதை உள்ளது என்றும், அதனை அவர் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றார். சேரக்கூடாத இடத்தில் சேர்ந்துவிட்டு, வேறு வழியின்றி அவர்கள் சொல்வதை எல்லாம் திருமாவளவன் பேசுவதாகவும் தெரிவித்தார்.
News August 17, 2025
நடிகை மினு முனிர் வழக்கில் திடுக்கிடும் தகவல்

நடிகை மினு முனீர் அண்மையில் போக்சோ சட்டத்தில் கைதானார். இது தொடர்பாக போலீசார் விசாரிக்கும் சூழலில், ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகிவுள்ளது. அதில், பாதிக்கப்பட்ட இளம்பெண் சம்பவம் நடந்த போது சிறுமியாக இருந்ததால் சென்னையில் தங்கிய வீடு, குற்றவாளிகள் அடையாளம், ஓட்டல் குறித்த விவரங்களை மறந்துள்ளதாகவும், இதனால் வழக்கை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியாமல் போலீசார் திணறுவதாகவும் கூறப்படுகிறது.
News August 17, 2025
சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

* அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
* அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
* உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.
* சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.
* கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.