News April 3, 2025
17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: IMD

17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்(IMD) கணித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் எனக் கூறியுள்ளது. மேலும், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது.
Similar News
News August 23, 2025
விஜய் அபார சாதனை.. அரசியலில் புதிய வரலாறு

இந்திய அரசியல் வரலாற்றில் அதிக தொண்டர்கள் பங்கேற்ற மாநாடு(14.78 லட்சம்) என தவெகவின் மதுரை மாநாடு சாதனை படைத்திருப்பதாக Times of India தெரிவித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பாஜக (11.86 லட்சம்), சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சி(11.03 லட்சம்), தெலுங்கு தேசம் கட்சி(10.55 லட்சம்), பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி(5.13 லட்சம்) ஆகியவை இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது. விஜய்க்கு கூடிய கூட்டம் ஓட்டாகுமா?
News August 23, 2025
வழக்கு சாட்சி: குழந்தைகளை பாதுகாக்க அரசு புதிய முடிவு!

வழக்குகளில் சாட்சியாக உள்ள குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதுகாப்பது தொடர்பாக குழு அமைக்க TN அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விதிமுறைகளை வகுக்க பல துறைகள் அடங்கிய குழு ஒன்றை விரைவில் அமைக்க உள்ளதாம். கோவையில் 8 வயது மகளின் கண்முன்னே அவரது தாய் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொலையை நேரில் பார்த்த குழந்தை உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.
News August 23, 2025
திருமா – ராமதாஸ் சீக்ரெட் மீட்டிங்?

திமுக கூட்டணியில் பாமக இணைவதற்கு விசிக எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், தைலாபுரத்திற்கே சென்று திருமா, ராமதாஸை சந்தித்ததாக தகவல்கள் கசிகின்றன. இச்சந்திப்பில் திமுக கூட்டணியில் பாமக இணைவதற்கு தடை போடமாட்டேன் என திருமா சொன்னதாகவும், பாமகவை பிளவுபடுத்தும் பாஜகவின் திட்டத்தை முறியடிக்கும் நோக்கில், திருமா இதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.