News April 3, 2025

17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: IMD

image

17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்(IMD) கணித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் எனக் கூறியுள்ளது. மேலும், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது.

Similar News

News November 14, 2025

தங்கம் விலை உயர்வு.. ஊரை காலி செய்யும் தொழிலாளர்கள்

image

தங்கம் விலை உயர்வால், மக்களின் வாங்கும் சக்தி வெகுவாக குறைந்துள்ளது. இதனால், தங்க நகை தயாரிப்பில் தேசிய அளவில் புகழ் பெற்ற கோவையில் மட்டும், போதுமான பணி ஆணைகள் கிடைக்காமல், பிற மாவட்டங்களை சேர்ந்த 10,000 பொற்கொல்லர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாக தங்க நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சுப நிகழ்வுகளுக்காக நகை வாங்குபவர்களால் மட்டும் ஓரளவு வியாபாரம் நடப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

News November 14, 2025

TN-ல் டெலிவரி வேலை செய்யும் இளம் டாக்டர்கள்

image

`உனக்கு என்னப்பா டாக்டரா இருக்க, நல்லா சம்பாதிப்ப’ என இனி சொல்லாதீர்கள். ஏனென்றால் TN-ல் இளம் டாக்டர்களின் நிலை மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இளம் டாக்டர்களுக்கு ₹15,000 தான் சம்பளமாக கிடைப்பதாகவும், ₹30,000-ஐ எட்டுவதற்குள் 30 வயது ஆகிவிடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், கேப்/பைக் டிரைவர், டெலிவரி மேன் வேலைகளுக்கும் MBBS படித்த இளம் டாக்டர்கள் செல்லும் நிலை உள்ளதாம்.

News November 14, 2025

2026 தேர்தலில் களமிறங்க ரெடியாகும் பிரியா

image

விஜய் வருகை, சீமானின் வாக்கு சதவீதம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் சென்னை, கோவை போன்ற நகரங்களில் இளம் வேட்பாளர்களை களமிறக்க வேண்டும் என்ற கருத்து திமுகவுக்குள் வலுவாக இருக்கிறதாம். இந்த சூழலில், சென்னை மேயராக இருக்கும் பிரியா, சேகர்பாபு வாயிலாக திமுக தலைமையிடம் எம்எல்ஏ சீட் கேட்டு வருகிறாராம். ஒருவேளை சீட் கிடைத்தால், அவர் திரு.வி.க.நகர் தொகுதியில் களமிறங்கலாம் என சொல்லப்படுகிறது.

error: Content is protected !!