News April 3, 2025
17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: IMD

17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்(IMD) கணித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் எனக் கூறியுள்ளது. மேலும், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது.
Similar News
News January 16, 2026
மின் கட்டணத்தில் மாற்றம்.. மகிழ்ச்சியான செய்தி

2026 தேர்தலை முன்னிட்டு, ஆளும் திமுக அரசு அடுத்தடுத்து புதிய திட்டங்களையும், முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் முறையை மீண்டும் கொண்டுவர ஆலோசிக்கப்படுகிறதாம். இதற்காக அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு மாதாந்திர கட்டணம் படிப்படியாக அமல்படுத்த வாய்ப்புள்ளதாகவும் தகவலறிந்தவர்கள் கூறுகின்றனர்.
News January 16, 2026
இந்தியாவில் விளையாட மறுப்பு: சமரசம் பேச களமிறங்கும் ICC

T20 உலகக் கோப்பையில் வங்கதேச அணியின் பங்கேற்பை உறுதிசெய்ய ICC முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. விரைவில் ICC குழு வங்கதேசத்திற்கு நேரடியாக சென்று வங்கதேச கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. வீரர்களின் பாதுகாப்பு காரணமாக, இந்தியாவில் விளையாட மறுக்கும் வங்கதேச அணி, போட்டிகளை இலங்கையில் நடத்த கோரிய நிலையில், சிக்கலுக்கு தீர்வு காண நேரடி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
News January 16, 2026
அதிமுக ஆபிஸில் தற்கொலை.. இபிஎஸ் அதிர்ச்சி

சென்னை ஜாஃபர்கான்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் பகுதி செயலாளர் சுகுமார் உயிரை மாய்த்துக் கொண்டார். கடந்த சில நாள்களாக தேர்தல் பணியில் ஈடுபட்ட அவர், கட்சி அலுவலகத்திலேயே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் உடலை கைப்பற்றிய போலீசார், குடும்ப பிரச்னையா அல்லது வேறு காரணங்களா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


