News August 6, 2024

இந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று, வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் ( மணிக்கு 30 – 40 கி.மீ. வேகம்) மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் கனமழை பெய்யலாம் என்றும் கணித்துள்ளது.

Similar News

News January 15, 2026

திமுகவை விடாமல் சீண்டும் மாணிக்கம் தாகூர்!

image

ஆட்சியில் பங்கு என்பதை மீண்டும் வலியுறுத்தி, பொங்கல் வாழ்த்திலும் திமுகவை சீண்டியுள்ளார் மாணிக்கம் தாகூர். கேரள UDF மாடல் அதிகார பகிர்வுக்கு சிறந்த உதாரணம் எனக் கூறியுள்ள அவர், நட்பு+பங்கே அதன் அடித்தளம் என்று தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணிக்கு ‘பை-பை’ சொல்வதில்லை என்று தெரிவித்த அவர், 2026-ல் இந்த மாடல் வெல்ல வேண்டும் எனவும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News January 15, 2026

பொங்கல் ட்ரீட்: மாப்பிள்ளைக்கு 158 வகை உணவுகள்!

image

தலைபொங்கல் என்றாலே மாப்பிள்ளைகளுக்கு மாமனார் வீட்டில் ராஜ உபசரிப்புதான். ஒவ்வொரு குடும்பத்தினரும் போட்டி போட்டுக் கொண்டு, பல வகையான உணவுகளை விருந்து வைத்து அசத்துவர். அந்த வரிசையில் இந்த பொங்கலுக்கு இவர்கள்தான் டாப்பு. ஆந்திராவின் தெனாலி பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தனது மாப்பிள்ளைக்கு சுமார் 158 வகை உணவுகளை பரிமாறி உள்ளனர். உங்க தலைபொங்கலுக்கு மாமனார் வீட்டில் என்ன விருந்து வெச்சாங்க?

News January 15, 2026

BREAKING: பொங்கல் நாளில் பணம் அறிவித்தார் முதல்வர்

image

பொங்கல் திருநாளில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். பருவமழை, டிட்வா புயலால் 1.39 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட 84,848 விவசாயிகளின் வங்கி கணக்கில் நிவாரணத் தொகையை செலுத்தும் வகையில், ₹111.96 கோடி ஒதுக்கீடு செய்து, 33%-க்கு மேல் பயிர் சேதம் ஏற்பட்ட அனைத்து பயிர்களுக்கும் ஒரு ஹெக்டேருக்கு ₹20,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

error: Content is protected !!