News May 17, 2024
சென்னையில் புரட்டி எடுக்கும் மழை

சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளே அரைமணி நேரமாக முடங்கியுள்ளனர். வடபழனி, அசோக் நகர், சைதாப்பேட்டை, கிண்டி, நந்தனம், தேனாம்பேட்டை, ஆவடி, கோயம்பேடு உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாள்களாக வெயில் கொளுத்தி எடுத்த நிலையில், தற்போது மழை பெய்வதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News August 9, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹200 குறைந்தது

இந்த வாரம் தொடங்கியது முதலே ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று(ஆக.9) சவரனுக்கு ₹200 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,445-க்கும், சவரன் ₹75,560-க்கும் விற்பனையாகிறது. இதனால் நடுத்தர மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
News August 9, 2025
திருப்புமுனையை ஏற்படுத்தும் இன்றைய பாமக பொதுக்குழு

மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு பாமகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னும் இருவரும் சமாதானம் ஆகவில்லை. இதற்கிடையில், தானே பாமக தலைவர் என்று ராமதாஸ் கூறிவரும் நிலையில், இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணியே தலைவர் என்று தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
News August 9, 2025
அவசரகால மருந்துகளுக்கு விலை உச்சவரம்பு நிர்ணயம்

மூச்சுத்திணறல், இருமலுக்கு பயன்படுத்தும் இப்ராட்ரோபியம் உள்ளிட்டவை அவசரகால மருந்துகளாக உள்ளன. இதன் விலை உச்சவரம்பு 1 ML ₹2.96 ஆக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. மேலும், BP-க்கு பயன்படுத்தும் சோடியம் நைட்ரோபுரஸைடு 1 ML ₹28.99, நெஞ்சு வலி சிகிச்சைக்கு பயன்படுத்தும் டில்டியாசெம் 1 காப்சூல் ₹26.77-க்கு விற்பனை செய்ய கூறியுள்ளது. இதோடு, 37 மருந்துகளின் விலையை குறைக்கவும் பரிந்துரை செய்துள்ளது.