News October 28, 2024

8 மாவட்டங்களில் கனமழை

image

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. கோவை, விருதுநகர், மதுரை, கடலூர், விழுப்புரம், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். எனவே, தீபாவளிக்கு வெடிகள், துணிகள் உள்ளிட்ட பொருட்களை பர்சேஸ் செய்ய வெளியே சென்ற மக்கள், பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லவும்.

Similar News

News July 10, 2025

தூங்கும் போது அதிக நேரம் சிறுநீரை அடக்குகிறீர்களா?

image

இரவில் பலரும் துக்கத்தை கெடுத்து கொள்ளக்கூடாது என்பதற்காக, அப்படியே சிறுநீரை அடக்குவார்கள். ஆனால், அது நோய்களுக்கு காரணமாகலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சிறுநீர்ப்பை, நரம்புகளில் இது பாதிப்பை ஏற்படுத்தும். சிறுநீர் கழிக்கும் தூண்டுதலை உதாசினப்படுத்தினால், இடுப்பு தசைகள் வலுவிழக்கும். இதனால், கிட்னியில் கல் உண்டாகலாம். சிறுநீர்ப்பாதை தொற்றும் ஏற்படும். அடுத்த வாட்டி யோசியுங்க!

News July 10, 2025

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வாகனக் கடன்.. அரசு அறிவிப்பு

image

வாகனம் மற்றும் கணினி வாங்க கடன் பெற விரும்பும் ஆசிரியர்கள் உரிய விவரங்களை சமர்ப்பிக்கும்படி பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறையின் நிதிக்கட்டுப்பாட்டு அலுவலகம், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிக்கை அனுப்பியுள்ளது. அதில், கடன் பெற விரும்புவோர் தற்போது அளிக்கப்பட்டுள்ள புதிய படிவத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

News July 10, 2025

அகமதாபாத் விமான விபத்து.. இந்த வாரம் முதல் அறிக்கை

image

அகமதாபாத் விமானம் விபத்து குறித்த முதல்நிலை விசாரணை அறிக்கை இந்த வார இறுதியில் தாக்கல் செய்யப்படவுள்ளது. 260 பேர் பலியான இந்த விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்தக் குழுவின் இயக்குநர், போக்குவரத்து, சுற்றுலா விவகார நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு ஆஜரானார். அப்போது அவர், விசாரணை சரியான பாதையில் செல்வதாகவும், முதல்நிலை அறிக்கை விரைவில் தாக்கலாகும் என்றார்.

error: Content is protected !!