News November 24, 2024
நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை

வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை (25.11.24) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. இதனால், அடுத்த 24 மணி நேரத்திற்கு மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழையும் கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Similar News
News November 23, 2025
ஸ்மிருதியின் காதல் வைபோகம் PHOTOS

2 நாள்களாக கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இசையமைப்பாளர் பலாஷ் முச்சலின் காதல் காட்சிகளே இணையத்தில் வைரலாகியுள்ளது. லவ் ப்ரொபோஸ், நிச்சய அறிவிப்பு, ஹல்தி நிகழ்ச்சி என இருவருக்கும் இடையேயான காதல் பொங்கி வழிய, பதிலுக்கு நெட்டிசன்கள் தங்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். இதனிடையே மெஹந்தி நிகழ்ச்சியின் போட்டோஸை சக இந்திய வீராங்கணைகள் பகிர அதுவும் லைக்குகளை குவித்து வருகிறது.
News November 23, 2025
மஞ்சள் கலந்து நீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா?

*மஞ்சள் நீர் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
*அஜீரணம், நெஞ்செரிச்சல், வாயு போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு மஞ்சள் கலந்த வெந்நீர் குடிப்பது நல்லது என கூறுகின்றனர். *கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது நல்லதாம். *ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் இந்த நீர் உதவுவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
News November 23, 2025
NATIONAL 360°: துப்பாக்கி வெடித்து காவலர் பலி

*ஹரியானாவில் 18 வயது பூர்த்தியாகாத நபர் ஓட்டிய கார் மோதியதில் 8 வயது சிறுவன் பலியான சோகம். *குஜராத்தில் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, பள்ளி வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்த நபரை தேடி வரும் போலீசார். *ஜார்க்கண்டில் தனது துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வெடித்ததில் காவலர் பலி. *மகாராஷ்டிரா DCM அஜித் பவாரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் 4 பேர் காயம்.


