News November 24, 2024
நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை

வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை (25.11.24) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. இதனால், அடுத்த 24 மணி நேரத்திற்கு மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழையும் கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Similar News
News November 26, 2025
400+ சேஸிங்கில் வரலாறு படைக்குமா இந்தியா?

கவுஹாத்தி டெஸ்டில், தெ.ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்ஸில் 260 ரன்களை டிக்ளேர் செய்தது. இதனால் 548 ரன்கள் இலக்குடன் 4-ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்தியா, இன்றைய நேர முடிவில் 27/2 ரன்கள் எடுத்தது. எனவே, இன்னும் 522 ரன்கள் எடுத்தாலே இந்தியா வெற்றி பெறும். முன்னதாக, டெஸ்டில் ஒரேயொரு முறை (AUS vs ENG – 404 ரன்கள்) மட்டும் 400+ ரன்கள் சேஸ் செய்யப்பட்டுள்ளது. இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமா?
News November 26, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 26, கார்த்திகை 10 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:00 AM – 10:30 AM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: சஷ்டி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: திருவாதிரை ▶சிறப்பு: சஷ்டி விரதம். ▶வழிபாடு: கந்தசஷ்டி கவசம் பாடி முருகனை வழிபடுதல்.
News November 26, 2025
TET விவகாரம்: PM மோடிக்கு CM ஸ்டாலின் கடிதம்

TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களும், 2 ஆண்டுகளுக்குள் TET தகுதியை பெற வேண்டும் என அண்மையில் SC உத்தரவிட்டது. இது ஆசிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில், PM மோடிக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்த உத்தரவால் TN-ல் 4 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர் என குறிப்பிட்டுள்ளார். எனவே, RTE சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு ஆசிரியர்களை பாதுகாக்க வேண்டும் என CM வலியுறுத்தியுள்ளார்.


