News October 22, 2024
கனமழை: நாளை இந்த மாவட்டத்திற்கு விடுமுறை

கனமழை எதிரொலியாக கோவை மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கோவையின் பல பகுதிகளில் இன்று கனமழை வெளுத்து வாங்கியது. நாளையும் கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 18, 2025
SIR-க்கு எதிராக SC-யில் கேரள அரசு வழக்கு

SIR நடைமுறைக்கு எதிராக கேரள அரசு சார்பில் SC-யில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கான பணியும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியும் ஒரே நேரத்தில் வருகிறது. இதனால், பணியாளர்கள் கடுமையான பணிச்சுமைக்கு ஆளாகின்றனர். அதுமட்டுமல்லாமல், இன்னும் சட்டமன்றத் தேர்தலுக்கு நேரம் இருப்பதால், SIR நடவடிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என்று அம்மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.
News November 18, 2025
SIR-க்கு எதிராக SC-யில் கேரள அரசு வழக்கு

SIR நடைமுறைக்கு எதிராக கேரள அரசு சார்பில் SC-யில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கான பணியும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியும் ஒரே நேரத்தில் வருகிறது. இதனால், பணியாளர்கள் கடுமையான பணிச்சுமைக்கு ஆளாகின்றனர். அதுமட்டுமல்லாமல், இன்னும் சட்டமன்றத் தேர்தலுக்கு நேரம் இருப்பதால், SIR நடவடிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என்று அம்மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.
News November 18, 2025
அனுமன் பற்றி சர்ச்சை பேச்சு.. ராஜமெளலி மீது புகார்

‘வாரணாசி’ பட விழாவில், திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த அப்படத்தின் இயக்குநர் ராஜமௌலி, அனுமன் உண்மையில் இருந்தால், இப்படிதான் உதவுவானா என சீறினார். இது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராஷ்டிரிய வானர சேனா சங்கம் ஹைதராபாத் போலீசில் புகார் அளித்துள்ளது. இருப்பினும், போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.


