News October 22, 2024
கனமழை: நாளை இந்த மாவட்டத்திற்கு விடுமுறை

கனமழை எதிரொலியாக கோவை மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கோவையின் பல பகுதிகளில் இன்று கனமழை வெளுத்து வாங்கியது. நாளையும் கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 4, 2025
இன்று முதல் 12 மாதங்கள் FREE

இன்று முதல் அடுத்த 12 மாதங்களுக்கு ChatGPT GO-வை இலவசமாக பெறலாம் என OpenAI அறிவித்திருந்தது ✤அதை பெற, ChatGPT-யின் Homepage-க்கு செல்லவும் ✤மேலே உள்ள ‘Upgrade for free’ஐ கிளிக் செய்யவும் ✤Go (Special Offer)-ஐ கிளிக் செய்யவும் ✤இதற்கு ₹2 கட்டணமாக வசூலிக்கப்படும் ✤கட்டியவுடன் உங்களுக்கு 12 மாதங்களுக்கு Free ChatGPT GO கிடைக்கும். இதை செய்த பிறகு, மறக்காமல் Auto Pay ஆப்ஷனை Off செய்து விடுங்கள்.
News November 4, 2025
எந்தெந்த தேதியில் +2 பொதுத்தேர்வு.. முழு விவரம்

* 2/03/25 – தமிழ், மொழிப்பாடங்கள் * 5/03/25 – ஆங்கிலம் * 9/03/25 – வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் *13/03/25 இயற்பியல், பொருளாதாரம் * 17/03/25 – கணிதம், நுண்ணுயிரியல், விலங்கியல், வணிகவியல் * 23/03/25 – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் * 26/03/25 – கணினி அறிவியல், உயிர் வேதியியல், அரசியல் அறிவியல்
News November 4, 2025
ஓவராக பேசிய மேனேஜர்.. கொலை செய்த ஊழியர்!

பெங்களூருவில் IT கம்பெனியில் பணிபுரிந்து வரும் சோமலா வம்சி(24), கண் கூசுவதால் ஆபீசில் உள்ள லைட்டை அணைக்கும்படி, மேனேஜர் பீமேஷ் பாபுவுடன்(41) வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்ற, நிதானமிழந்த வம்சி மிளகாய் பொடியை தூவி, பீமேஷ் நெஞ்சில் Dumbbells-ஐ கொண்டு அடித்துள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே பீமேஷ் பாபு மரணமடைந்துள்ளார். கோபத்தால் இன்று இருவரின் வாழ்க்கை அழிந்துவிட்டது!


