News May 16, 2024
அடுத்த 5 நாள்களுக்கு அதி கனமழை

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதற்காக இன்றும், மே 20ஆம் தேதியும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்யவிருக்கிறது. தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்யவிருக்கிறது. வடக்கு மாவட்டங்களில் மட்டும் அதிக மழையை எதிர்பார்க்க முடியாது.
Similar News
News December 2, 2025
IPL-க்கு விடை கொடுத்த CSK சாம்பியன்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுவதற்காக EX-CSK வீரர் மோயின் அலி IPL தொடரில் இருந்து விலகியுள்ளார். இதுதொடர்பாக SM-ல் பதிவிட்டுள்ள அவர், கிரிக்கெட் உலகில் புதிய பயணத்தை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். 2021 மற்றும் 2023-ல் CSK அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு மொயின் அலி முக்கியபங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே <<18424665>>பாப் டு பிளெஸ்சிஸும் <<>>இதுபோல அறிவித்திருந்தார்.
News December 2, 2025
பயிர் பாதிப்பு.. ஏக்கருக்கு ₹35,000 வழங்குக: வீரபாண்டியன்

கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் 2.22 லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக இந்திய கம்யூ. கட்சியின் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். விவசாயிகள் பெரும் பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும், அவர்களின் துயர் துடைக்கும் வகையில் ஏக்கருக்கு ₹35,000 இழப்பீடாக தர வேண்டும் என TN அரசை அவர் வலியுறுத்தியுள்ளார். ஆடு, மாடு இறப்புக்கும் சேர்த்து நிவாரணம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
News December 2, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை ▶குறள் எண்: 537 ▶குறள்:
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின்.
▶பொருள்: மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.


