News November 30, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை

image

தமிழகத்தில் மதியம் 1 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

Similar News

News April 28, 2025

விரைவில் உருவாகும் நாட்டின் முதல் AI..!

image

இந்தியாவின் முதல் உள்நாட்டு AI அடித்தள மாதிரியை உருவாக்க சர்வம் AI நிறுவனத்தை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. 67 நிறுவனங்களிடம் இருந்து திட்ட அறிக்கை பெறப்பட்ட நிலையில், மேற்கூறிய நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வம் AI, கடந்த 2023-ல் தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர்களில் ஒருவரான விவேக் ராகவன், ஆதார் அமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியவர்.

News April 28, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 320 ▶குறள்: நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். ▶பொருள்: தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.

News April 28, 2025

பண்டுக்கு போதாத காலம்.. ₹24 லட்சம் அபராதம்

image

MI-க்கு எதிரான நேற்றைய போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் LSG படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியுடன் சேர்த்து LSG கேப்டன் பண்டுக்கு இன்னொரு அடியும் விழுந்துள்ளது. ஃபீல்டிங்கின் போது ஓவர் வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், அவருக்கு ₹24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் நடந்த MI-க்கு எதிரான போட்டியிலும், அவருக்கு ₹12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

error: Content is protected !!