News August 12, 2024

இரவிலும் கனமழை வெளுத்து வாங்குகிறது

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த நிலையில், திருச்சி, தேனி, திண்டுக்கல், வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே சேலம், கரூர், நாமக்கல் உள்பட 15 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News March 9, 2026

விஜய்க்கு என்ன செய்வதென்று தெரியவில்லை: வைகோ

image

திமுக வெற்றி முகத்தில் நின்றுகொண்டிருப்பதால் என்ன செய்வதென்று விஜய்க்கு தெரியவில்லை என வைகோ விமர்சித்துள்ளார். அதனால்தான் திமுக வெளியிட்ட அறிவிப்புகளையே விஜய்யும் வெளியிட்டிருக்கிறார் என்ற அவர், அந்த உரிமை அவரது கட்சிக்கு இருக்கிறது என்றார். மேலும், மற்ற கட்சியின் தேர்தல் அறிக்கையில் இல்லாத ஓரிரண்டு அறிவிப்புகளும் மதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

News March 9, 2026

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

புதுக்கோட்டை, திருவாப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று(9.03.2026) அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். இதனால், அம்மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் இன்றைய தினம் இயங்காது. அதேநேரம், அரசு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் 14-ம் தேதி சனிக்கிழமை வேலைநாள் என கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.

News March 9, 2026

பசலைக்கீரையும் பலவித நன்மைகளும்!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின் படி, ➤பசலைக்கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் உடலை பாதுகாக்கும். ➤ஃபோலேட் இருப்பதால், பசலைக்கீரையை தவறாமல் சாப்பிட்டால், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. ➤லுடின் நிறைந்திருப்பதால், கண் புரை & இதர கண் பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும். ➤பசலைக்கீரையை அதிகம் உட்கொண்டால் மூட்டுகளில் வலி குறையும். Share it.

error: Content is protected !!