News December 31, 2024
3 மாவட்டங்களுக்கு இன்று கனமழை ALERT

தென் மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால், இன்று கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 2 நாள்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 23, 2025
BREAKING: புயல் உருவாகிறது.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெறும் என்று IMD அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. நேற்று காலை உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. இது, அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்த புயலுக்கு UAE பரிந்துரைத்த ‘சென்யார்’ என்ற பெயர் சூட்டப்படவுள்ளது.
News November 23, 2025
லண்டனில் ஓர் தமிழரின் சாதனை பயணம்!

அதிமுகவில் வட்ட செயலாளராக இருந்த ஒருவர் தற்போது லண்டனில் உள்ள கிரேடன் நகராட்சியின் துணை மேயர் என்றால் நம்ப முடிகிறதா. 1991-ல் வில்லிவாக்கத்தில் வட்ட செயலாளராக இருந்த தாமோதரன், படிப்புக்காக லண்டன் சென்று அங்கேயே செட்டில் ஆகி இந்த நிலையை அடைந்துள்ளார். அண்மையில், லண்டன் சென்ற CM ஸ்டாலினை அவர் சந்தித்தார். விரைவில் இங்கிலாந்து பார்லிமென்ட்டில் நுழைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. வாழ்த்துக்கள் சார்!
News November 23, 2025
எல்லைகளை ஆக்கிரமிக்கும் நாடுகளுக்கு வார்னிங்!

எந்தவொரு நாடும் தனது வலிமை (அ) அச்சுறுத்தல்களை பயன்படுத்தி, பிறநாட்டின் பகுதிகளை ஆக்கிரமிக்க கூடாது என்ற கூட்டு பிரகடனத்தை ஜி20 நாடுகள் ஏற்றுக்கொண்டன. இது ரஷ்யா, இஸ்ரேல், மியான்மருக்கான மறைமுக எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. அதேபோல், நேற்றைய உச்சிமாநாட்டில், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் கண்டித்தன. மேலும், பசியின்மை, பாலின பாகுபாட்டை களையவும் அறைகூவல் விடுத்துள்ளன.


