News April 25, 2024
பறவைக் காய்ச்சல் காரணமாக எல்லையில் கடும் சோதனை

கேரளாவில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் நிலையில், தமிழக எல்லையில் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எல்லையில் உள்ள கோழி, வாத்துப் பண்ணைகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கூடலூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கேரளாவில் இருந்து வரும் கோழிகளுக்கு முற்றிலும் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 20, 2026
தவெகவில் இருந்து செங்கோட்டையன் விலகலா?

தேர்தலுக்கு முன்பே கட்சி மாற <<18903913>>KAS<<>> திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இது உண்மைக்கு மாறான செய்தி என செங்கோட்டையன் தனது X பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். தனக்கு சோதனை ஏற்பட்ட போது, தனது கரம் பிடித்து அரசியலில் ஒரு வரலாறு படைக்கின்ற அளவிற்கு இன்று தன்னை விஜய் உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 2026-ல் விஜய்யை CM ஆக்குவதற்கு ஒற்றுமையுடன் உழைப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
News January 20, 2026
சென்சார் போர்டை சாடிய ‘ஜன நாயகன்’ பட தயாரிப்பாளர்

‘ஜன நாயகன்’ படம் தொடர்பான வழக்கின் விசாரணை ஐகோர்ட்டில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை சென்சார் போர்டு டிச.19-ல் பார்த்த நிலையில் மறு தணிக்கை என ஜன.5-ம் தேதிதான் தெரிவிக்கப்பட்டதாக ஜன நாயகன் படக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது. சென்சார் போர்டிடம் வெளிப்படைதன்மை இல்லை எனவும் சாடியுள்ளது. படத்திற்கு எதிரான புகார் குறித்த தகவலை சென்சார் போர்டு கொடுக்கவில்லை எனவும் வாதிடப்பட்டுள்ளது.
News January 20, 2026
கிட்னியை பாதுகாக்க எத்தனை லிட்டர் தண்ணீர் தேவை?

உடல் கழிவுகளை வெளியேற்றும் முக்கிய உறுப்பான கிட்னியை பாதுகாக்கும் ஒரே பொருள் தண்ணீர்தான். போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் கிட்னி செயலிழந்துவிடும். இந்நிலையில், கிட்னியை பாதுகாக்க தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் (8-10 கிளாஸ்) குடிக்க வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். மிதமான சூட்டில் உள்ள வெந்நீரை குடிப்பது சிறந்தது என்றும் அறிவுறுத்துகின்றனர். இப்பதிவை நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.


