News May 7, 2025
தமிழகத்தில் 40 டிகிரியை தொட்ட வெயில்

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக, வேலூரில் 40.5 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் பதிவானது. அடுத்தபடியாக, கரூர் பரமத்தி – 40°C, ஈரோடு – 39.6°C, சேலம் – 39°C, தர்மபுரி – 38.2°C, மதுரை – 38°C, சென்னை – 37.7°C, திருச்சி – 37.7°C, திருப்பத்தூர் – 37.2°C, கடலூர் – 37°C என அதிகபட்ச வெப்பம் பதிவானது. தமிழகத்தின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், அந்தப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைவாக உள்ளது.
Similar News
News November 27, 2025
ஆஸ்கர் போட்டியில் ‘மகாவதார் நரசிம்மா’

இந்தியாவில் பெரும் வெற்றிபெற்ற அனிமேஷன் படமான ‘மகாவதார் நரசிம்மா’ ஆஸ்கர் போட்டியில் களமிறங்கி, உலகளவில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. ஆஸ்கரின் அனிமேஷன் பிரிவில் தகுதிபெற்ற 35 படங்களில் ஒன்றாக இது இடம்பெற்றுள்ளது. ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படும் முதல் அனிமேஷ் படம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. Zootopia 2, Demon Slayer: Infinity Castle உள்ளிட்ட சர்வதேச படங்களுடன் இது போட்டியிடுகிறது.
News November 27, 2025
ராமதாஸ் கையில் அதிகாரங்கள்: ஸ்ரீகாந்தி

பாமக இரண்டாக பிரிந்து கிடப்பதால், இதுவரை கூட்டணியை உறுதி செய்ய முடியவில்லை. இதற்கிடையில், பாமகவின் அனைத்து அதிகாரங்களும் தனக்குதான் இருப்பதாக அன்புமணி கூறி வருகிறார். இந்நிலையில், அன்புமணிக்கு எதிராக அரசியல் களத்தில் குதித்துள்ள ஸ்ரீகாந்தி, பாமக பெயர், சின்னம் உள்ளிட்ட அனைத்தும் நிறுவனர் ராமதாஸிடம்தான் உள்ளது. விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
News November 27, 2025
அழுகிய பழங்களை சாப்பிட்டு.. WC கேப்டனின் சோகம்!

கிரிக்கெட் என்றாலே காசு கொழிக்கும் விளையாட்டு என கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். WC-யை வென்ற இந்தியா பெண்கள் பார்வையற்றோர் அணியின் கேப்டன் தீபிகாவின் கருத்துக்கள் நம்மை அதிர வைக்கிறது. அவர் சிறுவயதில் அழுகிய பழங்களின் கெட்ட பாகங்களை நீக்கிவிட்டு மீதியை சாப்பிட்டு வளர்ந்ததாக கூறினார். இது அணியின் அனைத்து வீரர்களும் எதிர்கொண்ட நிலைதான் என்ற அவர், அதில் தற்போதும் பெரிய மாற்றம் இல்லை என தெரிவித்தார்.


