News April 25, 2025

4 இடங்களில் 40 டிகிரி செல்சியஸை தொட்ட வெயில்

image

தமிழகத்தில் இன்று 4 இடங்களில் வெயிலின் தாக்கம் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக சுட்டெரித்தது. கரூர் பரமத்தி & மதுரை ஏர்போர்ட்டில் வெப்பம் 40.5 டிகிரியாக பதிவானது. திருச்சியில் 40.1 & வேலூரில் 40 டிகிரி என வெப்பம் சுட்டெரித்தது. அடுத்தபடியாக, ஈரோடு 39.6 டிகிரி, சேலம் 39.5 டிகிரி, என்று அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. சென்னையில் வெயில் 37.3 டிகிரியாக ரெகார்ட் ஆனது.

Similar News

News November 10, 2025

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

image

கரூரில் அதிமுகவிலிருந்து விலகிய 100-க்கும் மேற்பட்டோர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். புதுப்பாளையம், ஒத்தையூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அதிமுக, தவெக, தேமுதிகவினர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். நேற்று முன்தினம் <<18233598>>திமுக மாவட்ட நிர்வாகிகள்<<>> சிலர் அதிமுகவில் இணைந்தனர். தேர்தல் நெருங்குவதால் திமுக, அதிமுக போட்டி போட்டு மாற்றுக் கட்சியினரை இழுத்து வருகின்றன.

News November 10, 2025

Sports Roundup: 6 ரன்களில் அவுட் ஆன ஜெமிமா

image

*உலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் அனீஷ் பன்வாலா வெள்ளி பதக்கம் வென்றார். *ஆஸி., மகளிர் பிக்பாஷ் கிரிக்கெட்டில், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக விளையாடும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 6 ரன்களில் அவுட் ஆனார். *ஆஸி., நடைபெறும் ஓபன் ஸ்குவாஷ் போட்டி ஃபைனலில் தமிழக வீராங்கனை ராதிகா சுதந்திரா சீலன் தோல்வியை தழுவினார். *‘பிடே’ உலக செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

News November 10, 2025

BREAKING: நள்ளிரவில் அதிரடி கைது

image

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை எல்லைத் தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் அதிரடியாக கைது செய்துள்ளனர். 2 படகுகள், மீன்கள், வலைகள் உள்ளிட்ட பொருள்களையும் பறிமுதல் செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். கடந்த மாதம் 9-ம் தேதி 47 மீனவர்களை செய்து சிறையில் அடைத்த நிலையில், இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து வருகிறது.

error: Content is protected !!