News April 25, 2024

மேலும் ஒரு மாவட்டத்திற்கு வெப்ப அலை அலர்ட்

image

தமிழ்நாட்டில் மேலும் ஒரு மாவட்டத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து கரூர் மாவட்டத்திலும் வெப்ப அலை வீசும் என்பதால் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News January 15, 2026

மே.வங்கத்தில் வன்முறை கும்பல் ஆட்சி: ED

image

மே.வங்கத்தில் <<18797106>>I-PAC<<>> அலுவலக சோதனையை CM மம்தா பானர்ஜி தடுத்ததாக SC-ல் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில், ரெய்டின் போது மம்தாவும், போலீசாரும் அத்துமீறி நுழைந்து ஆதாரங்களை திருடி சென்றதாக ED குற்றஞ்சாட்டியதுடன், மே.வங்கத்தில் நடப்பது வன்முறை கும்பலின் ஆட்சி என்றும் விமர்சித்தது. இதற்கு பதிலளித்த மம்தா தரப்பு, தேர்தல் நேரத்தில் கட்சியின் ரகசிய தரவுகளை திருடவே ED திட்டமிட்டதாக வாதிட்டது.

News January 15, 2026

தேர்தல் நோக்கத்தோடு விஜய் இதை சொல்கிறார்: தமிழிசை

image

தேர்தல் நெருங்குவதால் தை மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை சொன்னாரா விஜய் என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என விஜய் <<18861926>>பதிவிட்டதை<<>> குறிப்பிட்ட அவர், சித்திரை மாதம் தான் தமிழ்ப் புத்தாண்டு என்றார். மேலும், விஜய்தான் தவறாக எண்ணி கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News January 15, 2026

ஈரானில் 3,428 பேர் பலி.. நாடே துக்கத்தில் ஆழ்ந்தது

image

உலகெங்கும் பல இடங்களில் நடைபெற்று வரும் போரால் மரண ஓலங்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, ஈரானை நிலைகுலையச் செய்துவரும் உள்நாட்டு போரில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 3,428 ஆக உயர்ந்துள்ளது. அரசுக்கு எதிரான போரில் ஜென் Z தலைமுறையினரின் தீவிர போராட்டத்தில் பொதுமக்களும் சிக்கி உயிரிழந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஈரான் மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!