News September 28, 2025

கரூர் சம்பவத்தால் மனவேதனை: பவன் கல்யாண்

image

விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என ஆந்திரா DCM பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும், இறந்தவர்களில் 6 குழந்தைகளும் அடங்குவர் என்பது மனவேதனை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என X-ல் அவர் பதிவிட்டுள்ளார்.

Similar News

News January 1, 2026

14 வழக்குகளில் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் என்கவுன்டர்

image

பிஹார், பெகுசராய் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், முக்கிய நக்சலைட் தலைவர் தயானந்த் மலாக்கர் சுட்டுக்கொல்லப்பட்டார். 14-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய இவரின் தலைக்கு ₹50,000 பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. மலாக்கரின் கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், INSAS ரகத் துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News January 1, 2026

ஷாருக் கான் ஒரு துரோகி: பாஜக MLA

image

அண்மையில் நடந்த IPL மினி ஏலத்தில் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை KKR அணி எடுத்திருந்தது. இந்நிலையில் வங்கதேச வீரரை அணியில் சேர்த்ததற்கு உ.பி.,யை சேர்ந்த பாஜக MLA சங்கீத் சோம், KKR அணியின் உரிமையாளர் ஷாருக்கானை கடுமையாக சாடியுள்ளார். வங்கதேசத்தினர் இங்கு விளையாடக்கூடாது என கூறிய அவர், ஷாருக் போன்ற துரோகிகளுக்கு இது தெரிய வேண்டும் எனவும் விமர்சித்துள்ளார்.

News January 1, 2026

உங்கள் குழந்தையிடம் இந்த பழக்கம் இல்லையா?

image

குழந்தைகள் அடம்பிடிக்கும்போது நீங்கள் அவர்கள் மீது கோபப்பட்டிருப்பீர்கள். இது தவறு என தெரிந்தும் மன்னிப்பு கேட்காமல் அப்படியே கடந்தும் சென்றிருப்பீர்கள். இதை கவனிக்கும் உங்கள் குழந்தையும், தவறு செய்தால் மன்னிப்பு கேட்க மறுக்கின்றனர். எனவே, உங்கள் குழந்தையிடம் நீங்கள் முதலில் மன்னிப்பு கேட்டு பழகுங்கள். இதன்மூலம் மரியாதையையும், மன்னிப்பு கேட்கும் குணத்தையும் அவர்கள் எளிதில் கற்றுக்கொள்வர். SHARE.

error: Content is protected !!