News April 23, 2025

நெஞ்சை உலுக்குகிறது.. நடிகர் சூர்யா உருக்கமாக இரங்கல்

image

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நெஞ்சை உலுக்குகிறது என்று நடிகர் சூர்யா வேதனையுடன் தெரிவித்துள்ளார். இனி வரும் காலங்களில் இதுபோன்ற ஒரு துயரத்தை யாரும் எதிர்க்கொள்ள கூடாது எனக் கூறிய அவர், உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா ஒற்றுமையாகவும் வலுவாகவும் இருக்கும். அமைதிக்கான நீடித்த பாதை உருவாகட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 8, 2026

வங்கி கணக்கில் ₹10,000.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

image

CM திறனாய்வு தேர்வுக்கு 10-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், ஜன.10 வரை நீட்டித்து TN அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜன.31-ல் தேர்வு நடைபெற உள்ள நிலையில், இதில் தேர்வாகும் 1,000 மாணவர்களுக்கு கல்வியாண்டுக்கு தலா ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும். www.dge.tn.gov.in தளத்தில் டவுன்லோடு செய்யப்படும் விண்ணப்பத்தை நிரப்பி HM வசம் ஒப்படைக்க வேண்டும். SHARE IT

News January 8, 2026

பொங்கலுக்கு முன்… இதை மறந்தும் கூட செய்யாதீங்க

image

இயற்கை பொருள்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருள்கள் தீயிட்டுக் கொளுத்தி நமது முன்னோர்கள் போகியை கொண்டாடினர். ஆனால், தற்போது பழைய பிளாஸ்டிக் பொருள்கள், டயர், டியூப் போன்றவற்றை எரிப்பதால், காற்றுமாசு ஏற்படுவதோடு, மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகளால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, போகி அன்று பழைய பொருள்களை எரிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அரசு வேண்டுக்கோள் விடுத்துள்ளது.

News January 8, 2026

பள்ளி மாணவன் வெட்டிக் கொலை.. தமிழகத்தில் அதிர்ச்சி

image

நெல்லை, பணகுடியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் லெட்சுமணன்(15) கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். லெட்சுமணன், தனது எதிர் வீட்டில் உள்ள சபரிராஜன் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சபரிராஜன் அரிவாளை எடுத்து லெட்சுமணனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். அவரது மரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!