News April 23, 2025

நெஞ்சை உலுக்குகிறது.. நடிகர் சூர்யா உருக்கமாக இரங்கல்

image

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நெஞ்சை உலுக்குகிறது என்று நடிகர் சூர்யா வேதனையுடன் தெரிவித்துள்ளார். இனி வரும் காலங்களில் இதுபோன்ற ஒரு துயரத்தை யாரும் எதிர்க்கொள்ள கூடாது எனக் கூறிய அவர், உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா ஒற்றுமையாகவும் வலுவாகவும் இருக்கும். அமைதிக்கான நீடித்த பாதை உருவாகட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 5, 2025

நல்ல ரோடு போட்டால், நிறைய விபத்து நடக்கும்: BJP MP

image

சாலைகள் நன்றாக போடப்பட்டிருந்தால், வாகனங்கள் வேகமாக செல்லும். அதன் காரணமாகவே விபத்துக்கள் அதிகரிக்கும் என BJP MP கொண்டா விஸ்வேஸ்வர் ரெட்டி தெரிவித்துள்ளார். ஸ்ரீகாகுளத்தில் நிகழ்ந்த பஸ் விபத்து குறித்து பேசிய அவர், நெடுஞ்சாலைகள் பெரிய வளைவுகளின்றி, ஒரே நேர்கோட்டில் இருக்கும் வகையில் அமைக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார். இவரின் கருத்தை குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க?

News November 5, 2025

போலி வாக்காளர்கள் CONG-க்கு வாக்களிக்க மாட்டார்களா? ECI

image

<<18205152>>ஹரியானா வாக்கு திருட்டு<<>> குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை ECI அதிகாரிகள் மறுத்துள்ளனர். போலி வாக்காளர்களை நீக்கும் SIR நடவடிக்கையை ராகுல் ஆதரிக்கிறாரா இல்லையா என்பதை விளக்க வேண்டும். உண்மையில் போலி வாக்காளர்கள் இருந்தால், அவர்கள் பாஜகவிற்கு தான் வாக்களித்தார்கள் என்பதை ராகுல் எப்படி கூறுகிறார், ஏன் காங்கிரஸுக்கு வாக்களித்திருக்க மாட்டார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

News November 5, 2025

FLASH: இலவச பட்டா.. தமிழக அரசு புதிதாக அறிவித்தது

image

சென்னையில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் வசிப்போருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. அயனாவரம், கிண்டி, அமைந்தகரை, கொளத்தூர், மாம்பலம், பெரம்பூர், வேளச்சேரி தாலுகாக்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க ராதாகிருஷ்ணன், மணவாளன் ஆகிய தனி வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், மதுரை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனராம்.

error: Content is protected !!