News April 23, 2025
நெஞ்சை உலுக்குகிறது.. நடிகர் சூர்யா உருக்கமாக இரங்கல்

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நெஞ்சை உலுக்குகிறது என்று நடிகர் சூர்யா வேதனையுடன் தெரிவித்துள்ளார். இனி வரும் காலங்களில் இதுபோன்ற ஒரு துயரத்தை யாரும் எதிர்க்கொள்ள கூடாது எனக் கூறிய அவர், உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா ஒற்றுமையாகவும் வலுவாகவும் இருக்கும். அமைதிக்கான நீடித்த பாதை உருவாகட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
இபிஎஸ் உடன் எந்த பகையும் இல்லை: டிடிவி

இபிஎஸ் உடன் எவ்வித தனிப்பட்ட பகையும் இல்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமித்ஷா, அண்ணாமலை கூறியதால்தான் NDA கூட்டணியில் இணைந்ததாகவும், கூட்டணி குறித்த முடிவுகளை இபிஎஸ் எடுப்பார் என நயினார் கூறியதாலேயே அங்கிருந்து வெளியேறியதாகவும் விளக்கம் அளித்துள்ளார். CM வேட்பாளராக இபிஎஸ்-ஐ ஒருபோதும் அமமுக ஏற்காது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
News September 18, 2025
இந்தியா மீதான வரி 15% ஆகக் குறையும்: ஆனந்த நாகேஸ்வரன்

இறக்குமதி வரி தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே நடந்துவரும் பேச்சுவார்த்தையில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர்(CEA) ஆனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பரஸ்பர இறக்குமதி வரியானது 15% ஆகக் குறையும் என்ற அவர், வரும் நவம்பர் 30-க்குள் கூடுதலாக விதிக்கப்பட்ட 25% வரியை அமெரிக்கா விலக்கிக் கொள்ளக்கூடும் என்றும் கணித்துள்ளார்.
News September 18, 2025
யார் இந்த மருது அழகுராஜ்?

1998-ல் அதிமுகவில் இணைந்து 2004 வரை பயணித்தார். பின்னர் தேமுதிகவில் இணைந்த அவர், 2009-ல் மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார். ‘நமது எம்ஜிஆர்’ என்ற அதிமுக நாளிதழ், EPS-OPS ஆல் உருவாக்கப்பட்ட ‘நமது அம்மா’ நாளிதழின் ஆசிரியராகவும் இருந்தார். பின்னர், OPS-ன் தீவிர ஆதரவாளராக மாறினார். ஜெ.,வின் பல அரசியல் உரைகளையும் எழுதியுள்ளார். திருப்பத்தூரில் தேமுதிக (2006), அதிமுக (2021) சார்பில் போட்டியிட்டிருந்தார்.