News April 23, 2025
நெஞ்சை உலுக்குகிறது.. நடிகர் சூர்யா உருக்கமாக இரங்கல்

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நெஞ்சை உலுக்குகிறது என்று நடிகர் சூர்யா வேதனையுடன் தெரிவித்துள்ளார். இனி வரும் காலங்களில் இதுபோன்ற ஒரு துயரத்தை யாரும் எதிர்க்கொள்ள கூடாது எனக் கூறிய அவர், உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா ஒற்றுமையாகவும் வலுவாகவும் இருக்கும். அமைதிக்கான நீடித்த பாதை உருவாகட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 8, 2025
கொரோனாவுக்கு பிறகு 4 மடங்கு அதிகரித்த இதய நாள தளர்ச்சி

கொரோனாவுக்கு பிறகு இளம் வயதினருக்கும் இதய நாள தளர்ச்சி(Vascular Dysfunction) ஏற்படுவது TN அரசு டாக்டர்கள் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. இது, இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள் வழக்கத்தை காட்டிலும் ஒன்றரை மடங்கு வீங்கும் பாதிப்பாகும். 2020 – 2023 வரை 11,420 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இவை தெரியவந்துள்ளன. இதுவே இளம் வயதினருக்கும் மாரடைப்பு அதிகரிக்க காரணமாக அமைவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
News December 8, 2025
மக்கள் பிரச்னைகளுக்கு BJP-யிடம் தீர்வு இல்லை: காங்.,

முக்கிய பிரச்னைகளை திசை திருப்பவே வந்தே மாதரம் பாடல் தொடர்பான <<18503037>>விவாதத்தை மோடி<<>> கையில் எடுத்திருப்பதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடக்கும் சிறப்பு விவாதத்தில் பங்கேற்ற அவர், மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் மத்திய அரசிடம் ஒரு தீர்வும் இல்லை என சாடியுள்ளார். மேலும் கடந்த காலத்தை பற்றி மட்டுமே பாஜக பேசி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
News December 8, 2025
BREAKING: விடுமுறை… வந்தது மகிழ்ச்சியான அறிவிப்பு

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி, ஸ்பெஷல் ரயில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மும்பை – திருவனந்தபுரம் ரயில், டிச.18- ஜன.8 வரை (வியாழன் மட்டும்) இயக்கப்படும். மறுமார்க்கத்தில் டிச.20 – ஜன.10 வரை (சனி மட்டும்) இயக்கப்பட உள்ளது. அதேபோல், மைசூரு – தூத்துக்குடி ரயில் டிச.23, டிச.27 ஆகிய நாள்களில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில், டிச.24, டிச.28-ல் ஓடும். பிளான் பண்ணிக்கோங்க நண்பர்களே!


