News October 3, 2025
35-45 வயதினரிடையே அதிகரிக்கும் இதய நோய்

இந்தியாவில் 35-45 வயதுக்கு உட்பட்ட ஊழியர்களுக்கு, இதய நோய் பாதிப்பு 70% அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுமார் 30,000 ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அவர்களுக்கு இதய நோய் ஏற்பட வேலைப்பளு, தொடர் மன அழுத்தம் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மெட்ரோ நகரங்களில் பணியாற்றும் ஊழியர்களில், 65% பேரின் தினசரி உடல் ரீதியான செயல்பாடு 30 நிமிடங்களுக்கும் குறைவு என தெரியவந்துள்ளது.
Similar News
News October 3, 2025
தமிழ்நாடு முழுவதும் தடை: அரசு அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் ‘Coldref’, ‘Nextro’ ஆகிய இரண்டு இருமல் சிரப்களை விற்கவும் விநியோகிக்கவும் அரசு தடை விதித்துள்ளது. ம.பி., மகா., மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இந்த மருந்துகளை குடித்த 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த சிரப்களுக்கு தடை விதித்ததுடன், இவை தொடர்பாக தீவிர ஆய்வுக்கும் விசாரணைக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளுக்கு இருமல் சிரப் கொடுக்குமுன் டாக்டரிடம் ஆலோசிக்கவும். SHARE!
News October 3, 2025
ரூபாய் அச்சிட எவ்வளவு செலவு ஆகுது தெரியுமா?

இந்திய நாணயத்தின் மதிப்பை விட அதன் தயாரிப்பு செலவு அதிகம். அது உங்களுக்கு தெரியுமா? நாணயம் மற்றும் நோட்டுகளின் உற்பத்தி செலவு எவ்வளவு என்பதை மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஸ்வைப் செய்து பாருங்க. உங்க கருத்த கமெண்ட்ல சொல்லுங்க. தற்போது டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரித்து வருவதால், நோட்டு மற்றும் நாணயங்கள்
தயாரிப்பதற்கான தேவை குறைந்து வருகிறது.
News October 3, 2025
குழந்தைகளுக்கு இருமல் மருந்து: அரசு எச்சரிக்கை!

2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் சிரப் கொடுப்பது குறித்து மத்திய அரசு எச்சரித்துள்ளது. அண்மையில் ம.பி., மற்றும் மகாராஷ்டிராவில் இருமல் சிரப் உட்கொண்ட 11 பேர் உயிரிழந்தனர். அவர்கள் ‘Coldref’, ‘Nextro’ சிரப்களை உட்கொண்டது தெரியவந்துள்ளது. அந்த மருந்துகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் கலப்படமாக இருந்ததால், மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என அரசு சந்தேகப்படுகிறது. ஆகவே, டாக்டரை ஆலோசிக்கவும்.