News March 19, 2024
குடியுரிமை திருத்தச் சட்டம் வழக்கில் இன்று விசாரணை

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு தடை கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சமீபத்தில் மத்திய அரசு இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதாக அறிவித்தது. இந்த சட்டத்தின் மூலம் முஸ்லீம்கள் குறிவைக்கப்பட வாய்ப்புள்ளது என AIMIM கட்சித் தலைவர் ஓவைசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இத்துடன் சேர்த்து இந்த சட்டத்தின் மீது தொடரப்பட்ட 262 வழக்குகள் மீதும் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
Similar News
News November 24, 2025
தலாய் லாமா 130 வயது வரை வாழ்வார்: திபெத்திய அமைப்பு

தலாய் லாமா உடல் நலத்துடன் உள்ளதாக மத்திய திபெத்திய நிர்வாக மூத்த தலைவர் பென்பா செரிங் கூறியுள்ளார். தற்போதைய தலாய் லாமா இறப்பை சீனா விரும்புவதாக கூறிய அவர், தலாய் லாமா இன்னும் 20 ஆண்டுகள் கூட வாழ்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த ஜூலையில் 90 வயதை அடைந்த தலாய், அடுத்த பெளத்த மதகுருவை (தலாய் லாமா) தேர்ந்தெடுக்கலாம் என அறிவித்தார். இதில் அரசும் தலையிடும் என சீனா அறிவித்தது.
News November 24, 2025
குஜராத்தில் காலடி வைத்த புலி PHOTOS

குஜராத் மாநிலத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக இளம் ராயல் பெங்கால் புலி காலடி வைத்துள்ளது. ரத்தன்மஹால் வனவிலங்கு சரணாலயத்தில் குடியேறியுள்ள புலி, மத்தியப் பிரதேசத்திலிருந்து இயற்கையாகவே இடம்பெயர்ந்திருக்கலாம் என்று வன அதிகாரிகள் நம்புகின்றனர். புலியின் போட்டோஸை மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News November 24, 2025
அயோத்தி ராமருக்காக விரதம் இருக்கும் PM மோடி

அயோத்தி ராமர் கோயிலில் 161 அடி உயர கொடி ஏற்றும் நிகழ்வு, நவ.25-ல் நடைபெறவுள்ளது. இதற்காக வருகை தரும் PM மோடி, அன்று காலை 11:50 மணிக்கு மேல் கொடியேற்றவுள்ளார். பின்னர், மகாதீபாராதனையில் பங்கேற்கும் அவர், சுவாமி தரிசனம் செய்வார். இவ்வாறு கொடி ஏற்றுகையில், மோடி விரதத்தில் இருப்பார் என ராமர் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர், மனிதநேயம் பற்றி உரையாற்றுவாராம்.


