News March 19, 2024
குடியுரிமை திருத்தச் சட்டம் வழக்கில் இன்று விசாரணை

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு தடை கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சமீபத்தில் மத்திய அரசு இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதாக அறிவித்தது. இந்த சட்டத்தின் மூலம் முஸ்லீம்கள் குறிவைக்கப்பட வாய்ப்புள்ளது என AIMIM கட்சித் தலைவர் ஓவைசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இத்துடன் சேர்த்து இந்த சட்டத்தின் மீது தொடரப்பட்ட 262 வழக்குகள் மீதும் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
Similar News
News October 24, 2025
வீடு வீடாக செல்லும் தேர்தல் அலுவலர்கள்

தமிழகத்தில் S.I.R. எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் முதல் தொடங்குகிறது. இப்பணியில் 75,050 அலுவலர்கள் ஈடுபடுவார்கள் என்றும் வீடு வீடாக சென்று விண்ணப்பத்தை தேர்தல் அதிகாரிகள் வழங்குவர் எனவும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், விண்ணப்பம் பூர்த்தி செய்து தர ஒரு மாதம் வரை அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
News October 24, 2025
Cinema Roundup: கவினின் ‘மாஸ்க்’ ரீலிஸ் டேட் அப்டேட்!

✦கவின்- ஆண்ட்ரியா நடித்துள்ள மாஸ்க் படம் வரும் நவம்பர் 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது ✦TTF வாசன் ஹீரோவாக அறிமுகமாகும் ‘IPL’ படத்தின் டீசர் வெளியானது✦’டாடா’ படத்தை இயக்கிய கணேஷ் பாபு இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது ✦தெலுங்கில் தான் நடித்த ‘பரதா’ படத்தின் ரிசல்ட் தன்னை மிகவும் வருத்தமடைய வைத்ததாக அனுபமா தெரிவித்துள்ளார்.
News October 24, 2025
புயல்: பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து தீவிர ஆலோசனை

Montha புயல் எதிரொலியால், தமிழ்நாட்டிற்கு மிக கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, அமைச்சர் அன்பில் மகேஸ் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மழையை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


