News July 10, 2025
லாரிகள் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இன்று அதிகாலையில் நடந்த விபத்து தமிழகத்தையே உலுக்கியுள்ளது. பாலையம்பட்டி பகுதியில் அதிகாலை 5 மணியளவில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் 2 லாரி டிரைவர்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து அருப்புக்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 10, 2025
மீண்டும் அணியில் பும்ரா

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பும்ரா களம் காண்கிறார். 2-வது டெஸ்ட் அவருக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில் இன்றைய போட்டியில் பிரசித்துக்கு பதில் களம் இறங்குகிறார். இங்கிலாந்து தரப்பில் டங்கிற்கு பதில் சோஃப்ரா ஆர்ச்சர் அணியில் இணைந்துள்ளார். இதனால் இரு அணிகளின் பந்து வீச்சு பலமும் அதிகரித்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ளது குறிப்பிடத்தக்கது. யார் கை ஓங்கும்?
News July 10, 2025
செயல்முறையில் தவறில்லை; செயல்படுத்தும் நேரம் தான்: SC

பிஹாரில் தற்போது ECI நடத்தும் <<17017994>>SIR செயல்முறையை <<>>எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, SIR செயல்முறையில் தவறில்லை. அதை செய்யும் காலம் தான் தவறு என்ற நீதிபதி, நவம்பரில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்போது இதை செய்ய வேண்டிய அவசியம் என்ன? தேர்தல் இல்லாத நேரங்களில் இந்த பணியை ECI செய்திருக்கலாமே, பாதிக்கப்பட்டவர் தீர்வு பெற கால அவகாசம் இல்லையே எனக் கேள்வி எழுப்பினார்.
News July 10, 2025
தவெக பெயர் இருந்தால் மானியம் மறுப்பா?

நெல்லை, கூட்டப்புளி கிராம மீனவர்கள் சிலர் தங்களின் படகுகளில் தவெக பெயரை குறிப்பிட்டிருந்ததால் மானியம் வழங்க முடியாது எனக் கூறுவது எதேச்சதிகாரப் போக்கு என்று விஜய் விமர்சித்துள்ளார். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு உரிய மானியம் என்பது வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஸ்டாலின் தலைமையிலான கபட நாடக திமுக அரசுக்கு கண்டனம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.