News June 26, 2024

நேரு குடும்பத்தில் இருந்து தேர்வான மூன்றாவது நபர்

image

INDIA கூட்டணி கட்சி மக்களவைக் குழு தலைவர்கள் கூட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, நேரு குடும்பத்திலிருந்து எதிர்கட்சித் தலைவரான மூன்றாவது நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக, ராஜீவ் காந்தி (18 டிசம்பர் 1989 – 23 டிசம்பர் 1990), சோனியா காந்தி (31 டிசம்பர் 1999 – 6 பிப்ரவரி 2004) எதிர்கட்சித் தலைவராக பதவி வகித்துள்ளனர்.

Similar News

News November 11, 2025

இளமையின் ரகசியத்தை பகிர்ந்த மஞ்சு வாரியர்

image

47 வயதாகும் மஞ்சு வாரியர், இப்போதும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில், தனது உடலமைப்பை பேணி வருகிறார். தன்னுடைய இளமையின் ரகசியத்தை அவர் பகிர்ந்துள்ளார். நாள் தவறாமல் ஜிம்முக்கு செல்வதும், நடனம் ஆடுவதும் தான் உடல் ரீதியாக நான் செய்யக்கூடிய பயிற்சிகள். இது தவிர உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்து வருகிறேன். இவற்றை தவறாமல் பின்பற்றுவதால் தான் வெயிட் போடாமல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

News November 11, 2025

எவ்வளவு காலம் பயத்தின் நிழலில் வாழ்வது? தேஜஸ்வி

image

டெல்லி கார் குண்டு வெடிப்பு குறித்து பேசியுள்ள தேஜஸ்வி யாதவ், இந்தியர்கள் எவ்வளவு காலம் பயத்தின் நிழலில் வாழ்வார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய பாதுகாப்பு விஷயத்தில் அரசுடன் உறுதியாக நிற்போம் எனவும், நாட்டின் பாதுகாப்பை விட வேறு எதுவும் முக்கியமில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விஷயத்தில் முழுமையான விசாரணை நடத்தி, நியாயமான நடவடிக்கை வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

News November 11, 2025

ஏன் வீட்டில் ஒற்றை ஊதுபத்தி ஏற்றி வைக்கக்கூடாது?

image

வீடுகளில் காலை, மாலை வேளைகளில் ஊதுபத்தி ஏற்றி வைப்பது வழக்கமே. ஆனால், அந்த ஊதுபத்தியை ஏற்றி வைக்க, சில வழிமுறைகள் உள்ளன. ஜோதிடத்தின் படி, வழிபாட்டின் போது ஊதுபத்தி ஏற்றினால், எப்போதும் 2 ஏற்றி வைக்கவும். இதைச் செய்வதன் மூலம், வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். அதே நேரத்தில், தெய்வங்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என நம்பப்படுகிறது. பலரும் அறியாத இந்த அரிய தகவலை அனைவருக்கும் பகிரவும்.

error: Content is protected !!