News June 26, 2024

நேரு குடும்பத்தில் இருந்து தேர்வான மூன்றாவது நபர்

image

INDIA கூட்டணி கட்சி மக்களவைக் குழு தலைவர்கள் கூட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, நேரு குடும்பத்திலிருந்து எதிர்கட்சித் தலைவரான மூன்றாவது நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக, ராஜீவ் காந்தி (18 டிசம்பர் 1989 – 23 டிசம்பர் 1990), சோனியா காந்தி (31 டிசம்பர் 1999 – 6 பிப்ரவரி 2004) எதிர்கட்சித் தலைவராக பதவி வகித்துள்ளனர்.

Similar News

News November 14, 2025

பிஹாரின் சீமாஞ்சல் பகுதியின் நிலவரம் என்ன?

image

அராரியா, பூர்ணியா, கதிஹார், கிஷன்கஞ்ச் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 24 தொகுதிகள் ‘சீமாஞ்சல்’ பகுதி என கூறப்படுகிறது. இப்பகுதியில் இஸ்லாமியர் வாக்குகள் அதிகம். இந்த வாக்குகளை பிரிக்கவே ஓவைசியின் கட்சி, MGB உடன் சேரவில்லை என கூறப்படுகிறது. 2020 தேர்தலில், இப்பகுதியில் NDA – 12, MGB – 7, ஓவைசியின் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றன. இம்முறையும் அங்கு NDA கூட்டணியே (10+) முன்னிலையில் உள்ளது.

News November 14, 2025

பிஹாரில் திடீர் ட்விஸ்ட்

image

பிஹாரில் ஜேடியு போட்டியிட்ட 101 தொகுதிகளில் சுமார் 82 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 2020 உடன் ஒப்பிடுகையில் சுமார் 39 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் சூழல் உருவாகிருப்பதால், நிதிஷின் கரம் அங்கு இன்றளவும் வலுவாக இருப்பது தெரியவந்துள்ளது. முன்னதாக ஜேடியு பின்னடைவை சந்தித்த நிலையில், நிதிஷ் CM வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவது கடினமாக பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய நிலவரம் பெரும் ட்விஸ்ட் தான்.

News November 14, 2025

BREAKING: தேர்தல் முடிவில் பெரும் பின்னடைவு

image

பிஹார் தேர்தலில் தேஜஸ்வி தலைமையிலான MGB கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. காலையில் இருந்து தொடர்ச்சியாக NDA கூட்டணி முன்னிலை வகிக்கிறது. MGB கூட்டணியும் 85 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்று டப் பைட் கொடுத்து வந்த நிலையில், தற்போது கடும் சரிவை சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி NDA 191 இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில், MGB வெறும் 49 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

error: Content is protected !!