News March 15, 2025
சொந்தமாக ரயில் வைத்திருந்த ஒரே இந்தியர் இவர்தான்!

ரயிலுக்கு சொந்தக்காரர் என்ற வரலாறு கொண்டவர் பஞ்சாப்பின் சம்பூரன் சிங். லூதியானா- சண்டிகர் ரயில் பாதைக்காக அவரது நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், உரிய இழப்பீடு கிடைக்காததால் அவர் கோர்ட்டை நாடினார். அதில், சதாப்தி ரயிலை ஜப்தி செய்யுமாறு தீர்ப்பளிக்கப்பட்டது. இதனையடுத்து, லூதியானா ஸ்டேஷன் சென்ற அவர் ரயிலின் உரிமையைப் பெற்றார். இருப்பினும், சிறிது நேரத்தில் கோர்ட் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
Similar News
News July 4, 2025
இந்த ரேஷன் கார்டுகள் செல்லாது?

ஜூன் 30-க்குள் கை விரல் ரேகை பதியாத ரேஷன் அட்டைகள் செல்லாது என்ற செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, ரேஷன் உதவிகள் கிடைக்க KYC சரி பார்ப்பது அவசியம் என்றும் ஆதார், மொபைல் எண், கைரேகை, இறந்தவர்கள் பெயர் நீக்கம் போன்றவற்றை அப்டேட் செய்யாவிட்டால் ரேஷன் கார்டு செல்லாது என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தவறான செய்தி, மக்கள் நம்ப வேண்டாம் என TN Fact Check விளக்கமளித்துள்ளது.
News July 4, 2025
2026ல் மதுரையில் போட்டியிடும் விஜய்?

ஆகஸ்டில் 2வது மாநில மாநாட்டை நடத்த தவெக செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த மாநாட்டை மதுரையில் நடத்த பெரும்பான்மையான நிர்வாகிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரையில் விஜய் களமிறங்க வாய்ப்புள்ளதாக முன்னதாக பேச்சு அடிப்பட்டது. தற்போது மதுரையில் மாநில மாநாட்டை நடத்துவதன் மூலம், அவர் அங்கு களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
News July 4, 2025
வரதட்சணை கொடுமை வழக்கு: ரிதன்யாவின் மாமியார் கைது

அவிநாசியைச் சேர்ந்த புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது மாமியார் சித்ரா தேவியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து ரிதன்யாவின் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஏற்கனவே ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.