News October 12, 2025
கரூர் சம்பவத்துக்கு இவர்தான் காரணம்: நயினார்

கரூர் சம்பவத்துக்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என்பது நாட்டுக்கே தெரியும் என நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ₹10 லட்சம் நிவாரணம், ஆனால் சாதாரண விபத்தில் இறந்தால் ₹2 லட்சம் மட்டும்தான். இது என்ன ஆட்சி எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், NDA ஆட்சி அமையும்போது இவை அனைத்துக்கும் திமுக பதில் சொல்ல வேண்டியிருக்கும் என அவர் கூறினார்.
Similar News
News October 12, 2025
தேனி: வங்கியில் வேலை; இன்றே கடைசி நாள்!

தேனி மக்களே, கனரா வங்கி (Canara Bank) 3500 அப்ரண்டிஸ் (Graduate Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News October 12, 2025
சீக்கிரம் இந்த அரசு வேலைக்கு அப்ளை பண்ணுங்க

மத்திய அரசு பள்ளிகளில் (EMRS) உள்ள 7,267 ஆசிரியர் & ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.Ed முடித்த 55 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் அல்லாதவர்களுக்கு ₹18,000- ₹1,12,400 வரையும், ஆசிரியர்களுக்கு ₹35,400 – ₹2,09,200 வரையும் சம்பளம் வழங்கப்படும். வரும் அக்டோபர் 23-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும். SHARE.
News October 12, 2025
அமெரிக்க மியூசியத்தில் காந்தாரா பஞ்சுருளி!

காந்தாரா திரைப்படத்தால் பிரபலமான, துளு நாட்டின் பாரம்பரிய சின்னமான பஞ்சுருளி முகா முகமூடி, இப்போது உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. பல வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வந்த இந்த அரிய கலைப் பொருள், தற்போது USA, வாஷிங்டனில் உள்ள NMAA-வில் நிரந்தர இடத்தை பிடித்துள்ளது. இது இந்தியாவின் கலாச்சாரம், கலை மற்றும் நாட்டுப்புற மரபுகளை உலக அரங்கில் இணைக்கும் ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.