News April 15, 2025
என்னை நீக்க அவருக்கு அதிகாரம் இல்லை: பொற்கொடி

தன்னை கட்சியில் இருந்து நீக்க BSP மாநிலத் தலைவர் ஆனந்தனுக்கு அதிகாரம் இல்லை என பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தெரிவித்துள்ளார். தனது கணவர் கொலை வழக்கில் CBI விசாரணை வேண்டும் என்பதில் ஏன் ஆனந்தன் அக்கறை காட்டவில்லை எனவும், தனக்கு எதிராக அவதூறு செய்தியை பரப்புவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனந்தனுக்கு எதிராக மேலிட பிரதிநிதிகளிடம் பொற்கொடி புகார் அளித்த நிலையில், அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது.
Similar News
News December 27, 2025
கவிதைகளால் வரைந்த ஓவியமே ஸ்ரீதிவ்யா

இன்ஸ்டாவில் ஆக்டிவா உள்ள ஸ்ரீதிவ்யா, தொடர்ந்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் அவர் பதிவிட்டுள்ள போட்டோஸுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் பார்த்ததுபோல் அப்படியே இருக்கிறார். அதே பேசும் பார்வை, அதே மழலை சிரிப்பு, அதே கொஞ்சும் அழகு என கவிதைகளால் எழுதப்பட்ட ஓவியமாய் கண் முன்னே நிற்கிறார். இந்த போட்டோஸ் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News December 27, 2025
தமிழகத்தில் பொங்கல் பரிசு.. அரசு அறிவித்தது

பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து அமைச்சர் காந்தி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, பொங்கல் தொகுப்பு தயாராக இருப்பதாகவும், ஜன.10-ம் தேதிக்குள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பொங்கல் பரிசுத் தொகையாக ₹5,000 வழங்கப்படுமா என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத காந்தி, அதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என பதிலளித்தார்.
News December 27, 2025
‘புஷ்பா 2’ நெரிசல் மரணம்.. அல்லு அர்ஜுன் பெயர் சேர்ப்பு

‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் அல்லு அர்ஜூன் உள்பட 24 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். திரையரங்கு நிர்வாகத்தின் அலட்சியமே, கூட்ட நெரிசலுக்கு காரணம் என குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டு, அவர்களை முதல் குற்றவாளியாக போலீசார் சேர்ந்துள்ளனர்.


