News April 15, 2025

என்னை நீக்க அவருக்கு அதிகாரம் இல்லை: பொற்கொடி

image

தன்னை கட்சியில் இருந்து நீக்க BSP மாநிலத் தலைவர் ஆனந்தனுக்கு அதிகாரம் இல்லை என பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தெரிவித்துள்ளார். தனது கணவர் கொலை வழக்கில் CBI விசாரணை வேண்டும் என்பதில் ஏன் ஆனந்தன் அக்கறை காட்டவில்லை எனவும், தனக்கு எதிராக அவதூறு செய்தியை பரப்புவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனந்தனுக்கு எதிராக மேலிட பிரதிநிதிகளிடம் பொற்கொடி புகார் அளித்த நிலையில், அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது.

Similar News

News December 23, 2025

100 ஆண்டுகளில் இதுவே முதல்முறை

image

வரும் 25-ம் தேதி உலகெங்கும் கொண்டாடப்படவுள்ள கிறிஸ்துமஸ் எவ்வளவு சிறப்புமிக்கது என்பது தெரியுமா? கிறிஸ்துமஸ் தினத்தின் தேதியை கொஞ்சம் கவனியுங்க, 25/12/25. இந்த எண் வரிசை என்பது 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வருகிறது. கடைசியாக 1925-ல் வந்தது. அடுத்து 2125-ல் தான் வரும். நீங்க எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் வாழ்கிறீர்கள் என்பதை உணர்ந்து, இப்பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

News December 23, 2025

ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு… வந்தாச்சு HAPPY NEWS

image

புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் அதுகுறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், துறைசார்ந்த அமைச்சர்களான சக்கரபாணி, பெரியகருப்பன் மற்றும் அதிகாரிகளுடன் CM ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், பொங்கல் பரிசுத் தொகை எவ்வளவு, பொங்கல் தொகுப்பில் இடம்பெறும் பொருள்கள் உள்ளிட்டவை இறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. SHARE IT.

News December 23, 2025

இலங்கைக்கு, இந்தியா ₹4,000 கோடி நிதியுதவி

image

இலங்கைக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அதிபர் அநுர குமார திசநாயகே, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் விஜித் ஹெராத்தை சந்தித்து பேசினார். அப்போது, டிட்வா புயல் சேதங்கள் குறித்து கேட்டறிந்த ஜெய்சங்கர், சீரமைப்பு பணிகளுக்காக இலங்கைக்கு, இந்தியா சார்பில், சுமார் ₹4,000 கோடி நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்தார். பாதிப்பில் இருந்து மீண்டுவர இந்தியா துணைநிற்கும் என்றும் கூறினார்.

error: Content is protected !!