News April 15, 2025
என்னை நீக்க அவருக்கு அதிகாரம் இல்லை: பொற்கொடி

தன்னை கட்சியில் இருந்து நீக்க BSP மாநிலத் தலைவர் ஆனந்தனுக்கு அதிகாரம் இல்லை என பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தெரிவித்துள்ளார். தனது கணவர் கொலை வழக்கில் CBI விசாரணை வேண்டும் என்பதில் ஏன் ஆனந்தன் அக்கறை காட்டவில்லை எனவும், தனக்கு எதிராக அவதூறு செய்தியை பரப்புவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனந்தனுக்கு எதிராக மேலிட பிரதிநிதிகளிடம் பொற்கொடி புகார் அளித்த நிலையில், அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது.
Similar News
News December 28, 2025
அசாம் வங்கதேசத்துடன் இணையப் போகிறதா?

அசாமில், வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை 40%-ஐ தாண்டிவிட்டதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். பாஜக கூட்டத்தில் பேசிய அவர், இந்த எண்ணிக்கை 50%-ஐ எட்டினால், அசாமை வங்கதேசத்துடன் இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அசாமின் கலாசாரமும் அடையாளமும் ஒரு மிகப்பெரிய ‘நாகரிகப் போரை’ சந்தித்து வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
News December 28, 2025
₹50 கட்டினால் போதும், ₹35 லட்சம் வரை கிடைக்கும் திட்டம்

Post Office-ன் கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தில் தினமும் 19 வயதிலிருந்து ₹50 கட்டினால், 80 வயதாகும் போது அதிகபட்சமாக ₹35 லட்சம் வரை கிடைக்கும். இதில், 55 வயதுக்குட்பட்டவர்கள் சேரலாம். திட்டத்தில் சேர்ந்தவர் மெச்சூரிட்டி தொகையை பெறும் முன் இறக்க நேர்ந்தால், நாமினிக்கு அந்த தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர அருகில் உள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 28, 2025
இனி ஒரு தம் 72 ரூபாய்.. அதிர்ச்சி

புகையிலைப் பொருள்கள் மீதான வரியை அதிகரிக்கும் வகையில் கலால் வரி திருத்த மசோதாவை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் காரணமாக, குறைந்த விலையில்(₹18) கிடைக்கும் ஒரு சிகரெட்டின் விலை, இனி ₹72-ஆக உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது சிகரெட் பழக்கத்தை கட்டுப்படுத்த உதவும் என்பதால், இந்த விலையேற்றத்தை வரவேற்று பலரும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?


