News April 15, 2025
என்னை நீக்க அவருக்கு அதிகாரம் இல்லை: பொற்கொடி

தன்னை கட்சியில் இருந்து நீக்க BSP மாநிலத் தலைவர் ஆனந்தனுக்கு அதிகாரம் இல்லை என பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தெரிவித்துள்ளார். தனது கணவர் கொலை வழக்கில் CBI விசாரணை வேண்டும் என்பதில் ஏன் ஆனந்தன் அக்கறை காட்டவில்லை எனவும், தனக்கு எதிராக அவதூறு செய்தியை பரப்புவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனந்தனுக்கு எதிராக மேலிட பிரதிநிதிகளிடம் பொற்கொடி புகார் அளித்த நிலையில், அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது.
Similar News
News December 21, 2025
வேலூர்: கஞ்சா வழக்கில் கைதானவர் உயிரிழப்பு!

குடியாத்தம் தாலுகா போலீசார் கடந்த மாதம் 26-ந் தேதி கொட்டமிட்டா கிராமத்தை சேர்ந்த கண்ணையன் (65) என்பவரை கஞ்சா செடி வளர்த்ததற்காக கைது செய்தனர். பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அங்கு கண்ணையனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின், சொந்த ஊரான கொட்டமிட்டா கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.
News December 21, 2025
பொங்கல் பரிசு ₹5000.. வந்தாச்சு ஜாக்பாட் HAPPY NEWS

பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ₹3000 அல்லது ₹5000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பையும் வழங்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. வழக்கமாக ஜனவரி முதல் வாரத்தில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும். இதனால், புத்தாண்டு வாழ்த்தோடு CM ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகை அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News December 21, 2025
இந்தியாவின் எதிரிகளுடன் ராகுல் சந்திப்பு: பாஜக

ஜெர்மனி பயணத்தில் ராகுல் காந்தி ‘இந்தியாவின் எதிரிகளை’ சந்தித்ததாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. பேராசிரியர் கார்னிலியா வோல் என்பவருடன் ராகுல் இருக்கும் போட்டோவை வெளியிட்ட பாஜக, அவர் இந்தியாவிற்கு எதிராக சதி செய்யும் USA கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸிடம் நிதியுதவி பெறும் பல்கலை.,யின் டிரஸ்ட்டி என தெரிவித்துள்ளது. ராகுலின் வெளிநாட்டு பயணங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் எனவும் BJP வலியுறுத்தியுள்ளது.


