News April 15, 2025

என்னை நீக்க அவருக்கு அதிகாரம் இல்லை: பொற்கொடி

image

தன்னை கட்சியில் இருந்து நீக்க BSP மாநிலத் தலைவர் ஆனந்தனுக்கு அதிகாரம் இல்லை என பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தெரிவித்துள்ளார். தனது கணவர் கொலை வழக்கில் CBI விசாரணை வேண்டும் என்பதில் ஏன் ஆனந்தன் அக்கறை காட்டவில்லை எனவும், தனக்கு எதிராக அவதூறு செய்தியை பரப்புவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனந்தனுக்கு எதிராக மேலிட பிரதிநிதிகளிடம் பொற்கொடி புகார் அளித்த நிலையில், அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது.

Similar News

News November 24, 2025

மகளிர் கபடி அணிக்கு PM மோடி வாழ்த்து

image

மகளிர் உலகக் கோப்பை கபடியில் சாம்பியன் பட்டம் வென்ற <<18376835>>இந்திய அணியை<<>> PM மோடி வாழ்த்தியுள்ளார். இந்த வெற்றியால் ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்வதாக அவர் X-ல் பதிவிட்டுள்ளார். மகளிர் அணியின் வெற்றியானது, எண்ணற்ற இளைஞர்களை கபடியில் ஈடுபடவும், பெரிய அளவில் கனவு காண்பதற்கு ஊக்குவிக்கும் என்றும் PM மோடி கூறியுள்ளார். தொடர் முழுக்க இந்திய வீராங்கனைகள் அபாரமாக செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News November 24, 2025

பவாரியா கொள்ளையர்கள் வழக்கு கடந்து வந்த பாதை (1/2)

image

கும்மிடிப்பூண்டி MLA-வாக இருந்த சுதர்சனத்தின் வீட்டில் 2005 ஜன.9 அன்று நள்ளிரவில் புகுந்த பவாரியா கும்பல், அவரை கொலை செய்துவிட்டு 65 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றது. இதையடுத்து இந்த கும்பலைச் சுட்டுப்பிடிக்க அப்போதைய CM ஜெயலலிதா ஐஜி ஜாங்கிட் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைத்தார். அவர்கள் ஹரியானாவை சேர்ந்த ஓம் பிரகாஷ், ஜெகதீஷ், ராகேஷ், அசோக், 3 பெண்கள் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.

News November 24, 2025

20 ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி தீர்ப்பு (2/2)

image

தமிழகத்தை உலுக்கிய இந்த கொலை வழக்கில் ஓம் பிரகாஷ் உள்ளிட்ட 2 பேர் சிறையிலேயே இறந்துவிட்டனர். ஜாமினில் விடுதலையான 3 பெண்கள் தலைமறைவாகினர். 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் பிறகு ஒருவரை விடுதலை செய்த கோர்ட் 3 பேருக்கு இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த சம்பவத்தை தழுவியே கார்த்தி நடிப்பில் 2017-ல் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!