News April 15, 2025
என்னை நீக்க அவருக்கு அதிகாரம் இல்லை: பொற்கொடி

தன்னை கட்சியில் இருந்து நீக்க BSP மாநிலத் தலைவர் ஆனந்தனுக்கு அதிகாரம் இல்லை என பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தெரிவித்துள்ளார். தனது கணவர் கொலை வழக்கில் CBI விசாரணை வேண்டும் என்பதில் ஏன் ஆனந்தன் அக்கறை காட்டவில்லை எனவும், தனக்கு எதிராக அவதூறு செய்தியை பரப்புவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனந்தனுக்கு எதிராக மேலிட பிரதிநிதிகளிடம் பொற்கொடி புகார் அளித்த நிலையில், அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது.
Similar News
News December 1, 2025
அனைவரையும் சமமாக நடத்துங்கள்: திருச்சி சிவா

ராஜ்யசபாவில் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் கருத்துக்கு இடமளிக்க வேண்டும் என்று CPR-யிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து, ‘அனைவரையும் சமமாக நடத்தும் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர் நீங்கள். அதை மனதில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள். ஜனநாயகத்தை காப்பாற்றுவீர்கள் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டார்.
News December 1, 2025
எந்த மாநில MLA-க்கள் அதிக சொத்து உடையவர்கள்!

தலைப்பே ஆர்வத்தை கிளப்புகிறதா! நாட்டில் எந்த மாநில MLA-க்கள் அதிக சொத்து உடையவர்களாக உள்ளார்கள் என்பதை அறிய மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். இந்த பட்டியல், தேர்தலின் போது பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. நீங்க இந்த லிஸ்ட்டில் எந்த மாநில MLA-க்கள் முதல் இடத்தில் இருப்பார்கள் என நினைத்தீர்கள்?
News December 1, 2025
BREAKING: திமுக முன்னாள் MP வீட்டில் கொள்ளை

தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனின் தஞ்சை வீட்டில் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயன் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்ற நிலையில், கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான விஜயன், 1999 முதல் தொடர்ந்து 3 முறை நாகை MP ஆக இருந்தவர்.


