News April 15, 2025
என்னை நீக்க அவருக்கு அதிகாரம் இல்லை: பொற்கொடி

தன்னை கட்சியில் இருந்து நீக்க BSP மாநிலத் தலைவர் ஆனந்தனுக்கு அதிகாரம் இல்லை என பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தெரிவித்துள்ளார். தனது கணவர் கொலை வழக்கில் CBI விசாரணை வேண்டும் என்பதில் ஏன் ஆனந்தன் அக்கறை காட்டவில்லை எனவும், தனக்கு எதிராக அவதூறு செய்தியை பரப்புவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனந்தனுக்கு எதிராக மேலிட பிரதிநிதிகளிடம் பொற்கொடி புகார் அளித்த நிலையில், அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது.
Similar News
News December 4, 2025
இந்திய மண்ணில் சாதனை படைத்த ரோஹித்!

SA-வுக்கு எதிரான 2-வது ODI-ல் 14 ரன்களில் அவுட்டானாலும், ரோஹித் சர்மா சாதனை ஒன்றை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில், இந்திய மண்ணில் 9 ஆயிரம் ரன்களை அடித்த வீரர்களின் லிஸ்ட்டில் அவர் இணைந்துள்ளார். இந்த பட்டியலில் சச்சின் (14,192 ரன்கள்) முதல் இடத்திலும், கோலி (12,475 ரன்கள்) 2-வது இடத்திலும் உள்ளனர். டிராவிட்டை (9,004 ரன்கள்) முந்தி ரோஹித் சர்மா (9,005 ரன்கள்) 3-வது இடத்தில் முன்னேறியுள்ளார்.
News December 4, 2025
மக்களை திருத்தவே முடியாது: தமிழருவி மணியன்

இனி காமராஜர் மக்கள் கட்சியை நடத்துவதில் பயனில்லை என தமிழருவி மணியன் பேசியுள்ளார். எந்த கைமாறும் இல்லாமல் 16 ஆண்டுகள் கட்சி நடத்தியதாக கூறிய அவர், மக்களிடம் மாற்றம் வராததால் கட்சியை கலைத்து, தன்னுடன் இருந்தவர்களை தமாகாவில் சேர்த்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும், பணம் எதுவும் வாங்காமல் ஓட்டு போடும் நிலையில் இப்போது மக்கள் இல்லை எனவும் இது திருத்தவே முடியாத சமூகம் என்றும் அவர் கொந்தளித்துள்ளார்.
News December 4, 2025
BREAKING: 12 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு.. வந்தது Alert

அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், கோவை, ஈரோடு, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். எனவே, பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் குடை, ரெயின்கோட் போன்றவற்றை எடுத்து செல்லவும்.


