News April 15, 2025

என்னை நீக்க அவருக்கு அதிகாரம் இல்லை: பொற்கொடி

image

தன்னை கட்சியில் இருந்து நீக்க BSP மாநிலத் தலைவர் ஆனந்தனுக்கு அதிகாரம் இல்லை என பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தெரிவித்துள்ளார். தனது கணவர் கொலை வழக்கில் CBI விசாரணை வேண்டும் என்பதில் ஏன் ஆனந்தன் அக்கறை காட்டவில்லை எனவும், தனக்கு எதிராக அவதூறு செய்தியை பரப்புவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனந்தனுக்கு எதிராக மேலிட பிரதிநிதிகளிடம் பொற்கொடி புகார் அளித்த நிலையில், அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது.

Similar News

News December 12, 2025

சஞ்சுவுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க!

image

2-வது T20-ல் இந்தியாவின் சொதப்பலான பேட்டிங்கே தோல்விக்கு காரணம். தானும் கில்லும் சரியாக விளையாடவில்லை என கேப்டன் SKY-யே கூறிய நிலையில், சஞ்சுவுக்கு வாய்ப்பு வழங்க கோரிக்கை வலுத்துள்ளது. T20-ல் 3 சதங்களை விளாசிய சஞ்சு சாம்சன், அதில் இரண்டை SA-வுக்கு எதிராக தான் விளாசியுள்ளார். கில்லிற்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்துவிட்டு சஞ்சுவை சேர்க்கலாமே என நெட்டிசன்கள் வலியுறுத்துகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

News December 12, 2025

3-ம் உலகப்போர்: டிரம்ப் வார்னிங்!

image

4-வது ஆண்டை நெருங்கி வரும் ரஷ்யா-உக்ரைன் போர் மேலும் தொடர்ந்தால், அது ஒரு 3-ம் உலகப் போராக மாறக்கூடும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த மாதம் மட்டும் சுமார் 25,000 பேர் இந்த போரில் உயிரிழந்துள்ளதாக கூறிய அவர், இந்த போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனிடையே பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால், டிரம்ப் விரக்தியில் உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

News December 12, 2025

சபரிமலையில் மேலும் ஒரு தமிழர் உள்பட 19 பேர் மரணம்

image

சபரிமலைக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒரு பக்தர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்த செல்வமணி(40) என்ற பக்தர் மலைப்பாதையில் மயங்கி விழுந்த போது உயிர் பிரிந்துள்ளது. நவ.16-ல் நடை திறக்கப்பட்ட நிலையில், TN-ல் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் சபரிமலை கோயிலுக்கு சென்று வருகின்றனர். நடப்பு சீசனில் கோவை, கடலூரை சேர்ந்த பக்தர்கள் உட்பட 19 பேர் மாரடைப்பு மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர்.

error: Content is protected !!