News August 15, 2025
தேச வளர்ச்சிக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்: PM

இல.கணேசனின் மறைவு செய்தி தனக்கு வலியை தந்ததாக PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க கடுமையாக பணி செய்ததாகவும், தேசத்தின் வளர்ச்சிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த தேசியவாதியாக அவர் நினைவுகூரப்படுவார் என்றும் இரங்கல் செய்தியில் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் கலாச்சாரத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் எனவும் இல.கணேசனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
Similar News
News March 9, 2026
சூர்யகுமார் ஓய்வு.. வதந்திக்கு முற்றுப்புள்ளி

T20 WC பைனலுக்கு பிறகு சூர்யகுமார் தனது ஓய்வை அறிவிப்பார் என்று செய்திகள் வலம் வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். போட்டிக்கு பிறகு நிருபரின் கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போது ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்றும் அடுத்து எதிர்வரும் ஒலிம்பிக் மற்றும் T20 WC-ஐ வெல்வதிலேயே தனது தற்போதைய கவனம் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த 2 தொடர்களும் 2028-ல் நடைபெற உள்ளன.
News March 9, 2026
FLASH: பங்குச்சந்தைகள் கடும் சரிவு.. பல லட்சம் கோடி இழப்பு!

வாரத்தின் முதல் நாளிலேயே வர்த்தகம் தொடங்கியதும் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளன. Sensex 2,050 புள்ளிகள் சரிந்து 76,881 புள்ளிகளிலும், Nifty 619 புள்ளிகள் சரிந்து 23,831 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. SBI, Maruti Suzuki, Asian Paints, ICICI Bank உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் 3% – 5% வரை சரிந்ததால் அவற்றில் முதலீடு செய்தவர்கள் சுமார் ₹12 லட்சம் கோடிகளை இழந்துள்ளனர்.
News March 9, 2026
சற்றுமுன்: முன்னாள் MLA காலமானார்

காங்., மூத்த தலைவரும், EX MLA-வுமான சி.எஸ்.சுவாமிநாதன்(80) காலமானார். காங்., கமிட்டியின் பொதுச்செயலாளர், புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், 1991-ல் புதுக்கோட்டை தொகுதியில் வெற்றி பெற்று MLA-வாக தேர்வானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த MP ஜோதிமணி, சுவாமிநாதனின் எளிமையான சுபாவமும், நேர்மையும் அவரை ஒரு சிறந்த மக்கள் தலைவராக உயர்த்தியதாக குறிப்பிட்டுள்ளார்.


