News August 10, 2024
HCL நிறுவனத்தில் வேலை

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 2022-2023 மற்றும் 2023-2024 ஆம் ஆண்டுகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு படித்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 12, 2025
புதுக்கோட்டை மக்களே இத தெரிஞ்சிக்கோங்க!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த எண்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். இந்த எண்களில் 24 மணி நேரமும் பாதுகாப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
✅குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
✅பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
✅போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
✅சைபர் பாதுகாப்பு ( 1930 )
இந்த எண்களை Save பண்ணி வச்சுக்கோங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 12, 2025
புதுகை: பயிர் காப்பீடு பதிவு செய்ய இதுவே கடைசி

புதுவை மாவட்ட விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சம்பா நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.36,000 கடன் தொகையில் 1.5% பிரிமியம் தொகை ரூ.534 காப்பீடு கட்டணமாக கட்டி பதிவு செய்து கொள்ளலாம். பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கி, மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். 15.11.25 தேதி கடைசி நாளாகும், இதனை பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.
News November 12, 2025
புதுகை: புனித பயணம் செல்ல அரசு மானியம்!

புதுகை மாவட்ட கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் செல்ல ஒருவருக்கு ரூ.37,000, கன்னியாஸ்திரிகளுக்கு ரூ.60,000 ECS முறையில் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1.1.25க்கு பிறகு ஜெருசலம் பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர் மத பயனாளிகள் விண்ணப்பங்களை www.bcmbcmw.tn gov.in இணையத்தில் பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து 28.2.26க்குள் ஆணையர் சிறுபான்மை நலத்துறைக்கு அனுப்ப ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.


