News August 10, 2024

HCL நிறுவனத்தில் வேலை

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 2022-2023 மற்றும் 2023-2024 ஆம் ஆண்டுகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு படித்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

Similar News

News November 27, 2025

புதுக்கோட்டை: வெறி நாய்கள் கடித்ததில் 6 ஆடுகள் பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சங்கம்பட்டியில் கடந்த சில நாட்களாக வெறிநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விவசாய நிலத்தில் மேய்ந்த ஆடுகளை வெறிநாய் கடித்ததில் 6 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் பலியாகின. எனவே இந்த வெறி நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News November 27, 2025

புதுக்கோட்டை: கை விரலை கடித்து துப்பிய வாலிபர்

image

அன்னவாசல் அருகே வவ்வாநேரியை சேர்ந்த வெள்ளைச்சாமி. இவர் மலம்பட்டியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சொக்கம்பட்டியை சேர்ந்த கதிரேசன் என்பவர், வெள்ளைச்சாமி கடையில் கடனாக பீடி கேட்டுள்ளார். அதற்கு வெள்ளைச்சாமி பீடி தர மறுத்ததால், ஆத்திரமடைந்த கதிரேசன் வெள்ளைச்சாமியின் கை விரலை கடித்து துண்டாக்கினார். இதுகுறித்து வெள்ளைச்சாமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கதிரேசனை கைது செய்தனர்.

News November 27, 2025

புதுக்கோட்டை: ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் (நவம்பர் 26) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள், இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!