News March 21, 2025
ராஜகண்ணப்பனுக்கு எதிரான வழக்கு ரத்து: HC உத்தரவு

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலின் போது, முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பேரையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.
Similar News
News September 10, 2025
மாணவர்கள் கல்வியில் சிறக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

ஓம் வாக்தேவ்யைச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யைச தீமஹி
தந்நோ வாணி: ப்ரசோதயாத்
பொருள்:
பேச்சின் தெய்வத்தை நாம் தியானிக்கிறோம், ஆசைகளை நிறைவேற்றுபவர் மீது நாம் கவனம் செலுத்துகிறோம், தெய்வீகம் நம்மை ஊக்கப்படுத்தி வழிகாட்டட்டும். SHARE IT.
News September 10, 2025
BREAKING: கூட்டணியில் இணைகிறேன்.. TTV ட்விஸ்ட்

TTV, OPS மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்று நயினார், அண்ணாமலை நேற்று அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில், NDA கூட்டணி முதல்வர் வேட்பாளரான EPS-ஐ மாற்றினால், கூட்டணியில் இணைவதாக TTV அறிவித்துள்ளார். இந்த ட்விஸ்டை சற்றும் எதிர்பார்க்காத BJP தலைமை, செங்கோட்டையனை போல், தினகரனையும் சமாதானம் செய்ய முயற்சி செய்து வருகிறது. இதற்கான அசைன்மென்ட் அண்ணாமலையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம்.
News September 10, 2025
செப்.12-ல் சிபி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு

துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள சிபி ராதாகிருஷ்ணன் வரும் 12-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில், அவர் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இவர் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகும் 3வது துணை ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.