News February 12, 2025

வெறுப்பு பேச்சு தொடர்ந்து அதிகரிப்பு

image

தேர்தல் நேரத்தில் இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது, ‘இந்தியா ஹேட் லாப்’ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2023இல் 233 சம்பவங்கள் பதிவான நிலையில், 2024இல் அது 1,165ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பிரதமர் மோடி 63 முறை வெறுப்புணர்வு கருத்துக்களை வெளிப்படுத்தியதாகவும், பாஜக தலைவர்கள் 450 முறை வெறுப்பு பேச்சுக்கள் பேசியதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 12, 2025

இன்று 3வது ODI: அணியில் பந்த், அர்ஷ்தீப்?

image

IND VS ENG அணிகள் மோதும் 3வது ODI இன்று அகமதாபாத்தில் நடக்கிறது. IND இறுதி அணியில் ராகுல், ஹர்ஷித்துக்கு பதிலாக பந்த், அர்ஷ்தீப் வர வாய்ப்புள்ளது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு கடினமாகவும், பந்துவீச்சுக்கு சாதகமாகவும் இருக்கும் என்றும், பனி பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். Sports 18-2, ஹாட்ஸ்டாரில் பிற்பகல் 1.30 மணி முதல் LIVEல் பார்க்கலாம். WAY2NEWSல் லைவ் ஸ்கோர் அப்டேட்களைப் பெறலாம்.

News February 12, 2025

தினமும் ஒரு பொன்மொழி!

image

✍அரசியல் அதிகாரம் வாக்களிப்பவர்களிடம் தங்கியில்லை; அரசியல் அதிகாரம் வாக்குகளை எண்ணுபவர்களிடம் தங்கியுள்ளது. ✍வரலாற்றை உருவாக்குவது நாயகர்கள் அல்ல; வரலாறுதான் நாயகர்களை உருவாக்குகிறது. ✍பட்டுக் கையுறைகளுடன் உங்களால் புரட்சி செய்ய முடியாது. ✍நான் யாரையும் நம்புவதில்லை; என்னையே கூட நம்புவதில்லை. ✍இந்த உலகில் வெல்ல முடியாத படைகளே இல்லை என்பதைத் தான் வரலாறு காட்டுகிறது – ஜோசப் ஸ்டாலின்.

News February 12, 2025

மம்தா மீது நிர்மலா சீதாராமன் பாய்ச்சல்

image

மத்திய அரசு திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியை சுரண்டி, மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு மிகப்பெரும் ஊழலில் ஈடுபட்டு வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளார். 100 நாள் வேலைத்திட்டத்தில், 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றியதாக போலி கணக்கு காண்பித்து, மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்ததாக சாடிய அவர், மாநிலத்தை முன்னேற்ற எதிர்கால திட்டங்களோ இல்லை என்றும் விமர்சித்தார்.

error: Content is protected !!